உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10

அப்பாத்துரையம் - 25

அது காவிக்காரன் என்று கிழவன் கூறியவுடன் தான் சிறிது சிறிதாகத் தெளிவு கிட்டியது.

காவிக்காரன் இரண்டொரு பேச்சில் பேசாமடந்தைக்கு வழியறிந்து கொண்டான். அவன் திரும்பவும் வண்டி நோக்கிச் சென்றான்.

சிறிது நேரத்தில் கும்பலின் எதிரே மற்றோர் உருவம் வந்தது. சூசன் "அதோ திருமதி யோப்ரைட்” என்றான். அனைவரும் வரவேற்றனர். மருமகளின் புது வாழ்வு பற்றிப் பலர் பாராட்டத் தொடங்கினர்.

திருமதி யோப்ரைட் அனைவருக்கும் அவசரக் குறிப்புத் தோன்றச் சுருக்கமான மொழிகளில் வணக்கமும் விடையும் கூறிவிட்டு, "எனக்கு அவசரமாகப் போக வேண்டும். மன்னியுங்கள்.விளக்கொளிகள் மங்குகின்றன. பேசாமடந்தைக்குச் செல்லும் வழியைக் கூறுங்கள். பின்னர் உங்களைப் பார்க்கிறேன்” என்றாள்.

அவர்கள் வழியைச் சுட்டிக்காட்டினர். ஃவெர்வே அத்துடன் “இப்போதுதான் ஒரு காவிக்காரனும் அதே வழி கேட்டான். அவன் வண்டியைக் கண்டால், அதனுடன் போனால் போதும்." என்றான்.

திருமதி யோப்ரைட் அவர்கள் காட்டிய வழியே சென்றாள்.

பேசாமடந்தை என்பது திரு. வில்டீவுக்குரிய மனையிடத்தில் இருந்தது. அவனே அதன் நிலமுதலாளி. அந்த மனை புதர்க் காட்டின் பிற பகுதிகளைப் போலவே தற்காலமனிதன் ஆட்சிக்கு வளைந்து கொடுக்காத பகுதியாகத்தான் இருந்தது. ஆனால் அதை வழிக்குக் கொண்டு வரமுடியும் என்று ஒரு அறிவாளி கண்டான். அவன் தன் வாழ்வை அதில் கொட்டினான். அவன் வியர்வை அதில் ஊறிற்று. வியர்வையைத் தொடர்ந்து குருதி, குருதியைத் தொடர்ந்து தசையும் உடலும் அதில் இடம் பெற்றன. பித்துக்கொள்ளியாகக் காலஞ்சென்ற அவனிடமிருந்து மனை மற்றொரு அரைப்பித்துக்கொள்ளிக்குக் கைமாறிற்று. முந்தியவன் அறிவையும் உழைப்பையும் உறிஞ்சியது போல, நிலம் ரண்டாவது மனிதன் பணத்தையெல்லாம் உரமாக உண்டு ஏப்பமிட்டது. அவன் உடலும் அந்த மண்ணில் மாண்டது.