உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தாயகத்தின் அழைப்பு

11

இரண்டு நைந்த வாழ்வின் பயனைக் குனியாமல் நிமிராமல் அறுவடை செய்யும் குருட்டுப்பேறு வில்டீவுக்குக் கிடைத்தது. அவன் 'அமெரிகோவெஸ்புகி' போல் வந்தான், வெட்டினான், குவித்தான். பணக்கடவுள் திருவருள் அவன்மீது பால்மழை பொழிந்தது. மனையில் புது விடுதி ஒன்று தோன்றி அவனுக்குப் புதுப்புகழும் செல்வாக்கும் ஆட்சியும் தந்தன. புதர்க்காட்டின் பழைய நிலப்பண்ணைக் குடியின் செல்வியான தாம்ஸின் கையை அவாவும் அளவுக்கும் அவன் உயர்ந்தான்.

பேசாமடந்தையில் நுழையுமுன் திருமதி யோப்ரைட்டை நோக்கித் தொலைவிலிருந்து ஒரு வண்டி விரைந்து வந்தது. அவள் அது கண்டு தயங்கி நின்றாள். அது காவிக்காரன் வண்டி. கும்பலில் அவளுக்குக் கூறப்பட்ட காவிக்காரன் செய்தி அவள் நினைவுக்கு வந்தது. ஆனால் அவன் அருகே வந்ததும் “நீ யாரப்பா, இந்த இடத்தை விசாரித்து வருகிறாயாமே, ஏன்?” என்றாள்.

66

என்னை உங்களுக்குத் தெரியவில்லையா?”

அவள் விளக்கொளியில் கூர்ந்து பார்த்தாள். "ஆ, நீ எங்கள் பழைய பால்காரனல்லவா? நீ எப்போது காவிக்காரனானாய்?"

“அது பழங்கதை. தங்கள் மருமகள் தாம்சினை எனக்கு அறிமுகமுண்டு. அவளைப்பற்றி.."

66

0

"அவள் திருமணம் இன்று. பின்னால் பேசிக் கொள்ளலாம். நான் உள்ளேபோய் அவளைப் பார்க்க வேண்டும். போகிறேன்.' “சற்றுப் பொறுங்கள் அம்மா. அவர்கள் உள்ளே இல்லை” “உனக்கெப்படித் தெரியும்?”

66

'என் வண்டியில் இருக்கிறார்கள்.”

இதன் பின் நடைபெற்றது ஒரு சிறு நாடகம். காவிக்காரன் தனக்கே முற்றிலும் புரியாத நிகழ்ச்சிகளை நடந்தவாறு கூறினான்.

“நான் வழக்கமாக வண்டியை ஓட்டவிருந்தேன். பேயறைந்த கோலத்தில் ஒரு பெண் அருகே வந்தாள்” நான் அஞ்சினேன். ஆனால் ‘டிக்கரிவென், எனக்கு ஒரு உதவி செய்வாயா? நான் திக்கற்றுத் துடிக்கிறேன்' என்றது அவ்வுருவம். அதுதான் தாம்சின், தங்கள் மருமகள்.”