உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தாயகத்தின் அழைப்பு

25

பேசினார். "அந்தச் சிறுவன் இவ்விடம் விட்டுப் போனதே தவறு. தந்தை தொழிலே மகனுக்கு எல்லா வகையிலும் ஒத்திருக்கும். புது வழி செல்வது எனக்கு என்னவோ பிடிக்கவில்லை. என் தந்தை, மூதாதையர் எல்லாரும் கடலுக்குத்தான் சென்றனர். நானும் அதிலேயே வாழ்ந்தேன். எனக்கு மட்டும் மகனிருந்தால், நான் அவனை அதில்தான் கழிக்கவிடுவேன்" என்று கூறினார்.

66

“அத்துடன் அவர் பாரிஸ் நகரத்திலேயே வாழ்கிறாராமே. அந்தப் பொல்லாத நகரத்தில்தான் சில ஆண்டுகளுக்குமுன் மக்கள் மன்னன் தலையை வெட்டித் தள்ளினார்களாம். என் தாய் சிறு பிள்ளையாயிருக்கும்போது இது நடந்ததாகக் கூறுவாள். அது கேட்டு நாங்கள் இனி அந்த உலகில் என்ன என்ன நேருமோ கடவுளுக்கே தெரிய வரும் என்போம்" என்றது ஒரு குரல்.

“என் போன்ற பலருக்குத் தெரியும், என்ன வருமென்று. அது காரணமாக நாங்கள் ஏழாண்டுகள் கப்பலொன்றில் கடற்கரையின் கீழே பதுங்கிக் கிடக்கவேண்டி வந்தது.அது தவிரக் கால்போனவர், கை போனவர் எத்தனையோ பேர் நாள்தோறும் கப்பலில் வந்து மருத்துவம் பெற வந்தனர்... ஆனால் இடம் பாரிஸானாலும் வேலை வைர வேலை. அதில் மேலாளர் நிலையிலிருப்பதாகக் கேள்விப்படுகிறேன்.”

பேச்சு எங்கெங்கோ சென்று திரும்பி கிளிம்முக்கு வந்தது. ஒரு குரல் அவன் விசித்திரக் கருத்துக்களையும் ஆழ்ந்த சிந்தனைகளையும் பற்றிக் கூறிற்று. “ஆழ்ந்த கருத்துக்களா?” என்று தொடங்கினார் மீகாமன் வை. “அதெல்லாம் இந்தப் பிள்ளைகளை க்காலப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புவதால் வந்த வினை. அதனால் தீமையைத் தவிர நன்மையில்லை வாசற்படிதோறும் சுவர்தோறும் இந்தப் போக்கிரிப்பயல்கள் கரியோ சுண்ணாம்போ கொண்டு எழுதுவதைக் கண்டாலே இவர்கள் படிப்பின் தகுதி தெரியுமே. பெண்கள் வேறுபடித்திருந் தால் அந்தப் பக்கமே போக நீதியிராது. படித்திராவிட்டால் வர்கள் இந்தக் கெட்டபுத்தியை வளர்த்திருக்கவும் முடியாது; பரப்பியிருக்கவும் முடியாது. இவர்கள் தந்தையர் காலத்தில் இந்தப் படிப்பும் இல்லை. இந்தச் சிறுமதியும் இல்லை."

கல்வியையே அவர் கண்டித்தது ஓர் இளைஞனுக்குப் பிடிக்கவில்லை. “கல்வியே தவறு என்று கூறமுடியுமா? நூல்கள்