உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




3. இருதலைக் கவர்ச்சி

கிளிம்யோப்ரைட்டின்

வருகை ஹெக்டனில் எல்லோராலும் ஆர்வத்துடன் வரவேற்கப்பட்டது. அதன் மூலம் ஹெக்டனுக்கே ஒரு புதுவாழ்வு ஏற்படும் என்றும் எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததை விட அதன் பரபரப்பு விரைவில் குறைந்துவிட்டது. யோப்ரைட் குடியின்மீது உலவிய முகில் இதற்கு ஒரு காரணமானாலும் வேறும் ஒரு காரணமும் இருந்தது. கிளிம் எதிர்பார்த்தது போலப் புதர்க்காட்டை வெறுத்துப் பாரிஸின் பகட்டைக் கொண்டுவரவில்லை. அவன் பாரிஸ் ஆர்வத்தையே குறைத்துப் புதர்க்காட்டின் புகழே பாடினான். பாரிஸில் அவன் வாழ்ந்து வளர்ந்தாலும் அவன் உள்ளம் புதர்க்காட்டையே நாடிற்று.

இதனைத் தெரிந்து கொள்ளாதவர் அல்லது தெரிந்து கொள்ளவிடாதவர் ஒருவர்தான் - அதுவே அவன் மீது தன் புத்தார்வத்தைச் சொரிந்து தொலைவில் நின்று பூசித்த யூஸ்டேஷியா.

வருகையை எதிர்பார்த்த மக்கள் இப்போது விரைவில் அவன் போய்விடுவான் என்கிற இயல்பாய் எண்ணியிருந்தனர். கிறிஸ்துமஸ் கழிந்துவிட்டது. வாரம் ஒன்றாயிற்று, இரண்டாயிற்று.புறப்படுவதுபற்றிய சந்தடி காணோம். இதுபற்றி ஊரில் பேச்செடுத்துப் பலர் நேரிலேயே கிளிம்மிடம் கேட்டனர். அவன் நாட்டுப்புறக் கல்விக்கான தன் திட்டங்களையும் குறிக்கோளையும் பற்றிப் பேசத் தொடங்கினான். மக்கள் எதிர்பார்த்தபடி அவன் விடுமுறைக்கோ ஓய்வுபெறவோ வரவில்லை. பணங்கொடுத்த வைர வாணிபப் பணிக்கு கிட்டாத நிலையில் பலர் ஆவலாகப் பெருமையுடன் பேசிய பணிக்கு - அவன் ஒரு முழுக்குப் போட்டு விட்டுவந்துவிட்டான் என்பது அப்போதுதான் தெரிந்தது.

-