உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தாயகத்தின் அழைப்பு

55

மீண்டும் பொதிந்தெடுத்துக்கொண்டு தன் வீட்டண்டை வந்தாள். வழியில் டிக்கரியின் வண்டியைக்கண்டு அவனையும் அழைத்துக் கொண்டு ஓடிவந்தாள்.

வில்டீவ் வண்டியில் செல்வதுகண்டு கிளிம் அதைப் பின்பற்றினான். வில்டீவைக் கண்டதும் அவன்மீது தன் வசைமாரியைத் துவக்கினான். வில்டீவுக்கு அவனுடன் பேசிக்கொண்டிருக்க நேரமோ மனமோ இடந்தரவில்லை. விரைந்து சென்றான். ஆற்றுவெள்ளம் கரை புரண்டோடிற்று. இதனிடையே ஏதோ ஒன்று ஆற்றில் தொப்பென்று விழுவதாகத் தெரிந்தது. வில்டீவ், கிளிம் இருவர் உள்ளத்திலும் யூஸ்டேஷியா வின் எண்ணம் எழுந்தது. இருவரும் பாலத்திலும் கரையிலுமாகச் சென்றனர். தலைமயிர்போல ஏதோ ஒன்று வெள்ளத்தில் அலைவது தெரிந்தது. வில்டீவ் குதித்தான். அவனையும் வெள்ளம் சுழித்திழுத்தது. கிளிம் அதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. அவனும் குதித்தான். வெள்ளம் அவனையும் விழுங்கி ஏப்பமிட்டு எக்காளமடித்தது.

இதற்குள் கும்பல் கூடிற்று. தாம்ஸினும் டிக்கரியும் பரபரப்புடன் ஓடி அழுதரற்றினர். படகுகொணர்ந்து சிலர் வெள்ளம் ஒதுக்குமிடத்துத் துழாவினர். ஒவ்வொன்றாக மூன்று உடல்கள் எடுக்கப்பட்டன. அவை யூஸ்டேஷியா வில்டீவ் கிளிம் ஆகியவர்களுடையவை என்று கூறத் தேவையில்லை. கிளிம் உடல் ஒன்றில்தான் உயிர் இருந்தது. வில்டீவ் அவன் கரங்களைக் கட்டிக்கொண்டிருந்தும் உயிர் போய்விட்டது. யூஸ்டேஷியா உடல் வெள்ளத்தில் தோய்ந்தும் உருத்திரிந்தும் போயிருந்தது.