உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

87

வழக்கம்போல் எதிலும் கவனமில்லாமல் இருந்த அரசனுக்கு, வணிகன் கதை கேட்டதே! அரை உணர்வு வந்துவிட்டது. அவன் சேதாம்பற் செல்வி கூறியதைக் கூர்ந்து கவனித்தான்.

பிள்ளைகளைப் பற்றி அவள் கூறியதைக் கேட்டதே!, அவன் உண்மை நிலையை உணர்ந்தான். இளைஞர்கள் தன் குழந்தைகளே என்று கண்டு அவர்களை வந்து அணைத்துக் கொண்டான்.

அரசிக்கு இப்போதுதான் அரசன் தன் கணவன் என்று தெரிந்தது. அவள் ஓடி அவன் காலடியில் விழுந்தாள்.

கொடைமீளி தன் மனைவியுடனும் குழந்தையுடனும் இனிது வாழ்ந்தான். அரச காரியங்களில் அவன் அதுமுதல் கிளர்ச்சி யுடன் ஈடுபட்டான்.

அங்கனையும் அனங்கனையும் வளர்த்த படகோட்டிக்கும், அவன் மனைவிக்கும் அரும்பரிசில்கள் வழங்கப்பட்டன.

கொடைமீளியின் ஆட்சித் திறமையும் வள்ளன்மையும் மீண்டும் அவன் புகழ்பரப்பியது. செங்கேணி நாட்டு மக்கள் கடுங்கோனின் கொடுங்கோன்மை தாளாமல் கிளர்ந்தெழுந்து அவனை அழித்தனர். தம் பழைய அரசனையே மீட்டும் அழைத்தனர். கொடைமீளி தன் புதிய கொண்கான நாட்டில் அங்கனை இளவரசனாக்கிவிட்டு, செங்கேணி நாட்டின் ஆட்சியைக் கைக்கொண்டான்.

கொடைமீளி நீண்டநாள் ஆண்டபின், அங்கன் செங்கேணி நாட்டையும் அனங்கன் கொண்கான நாட்டையும் ஆண்டனர். கொடை மீளியின் துயரக்கதை இருநாட்டு மக்களுக்கும் நாட்டுப் பெருங்கதை ஆயிற்று.