உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
252 ||

அப்பாத்துரையம் - 33




புட்டியைக் கடைசியில் வாங்கியவனைப் பற்றிக் கீவும் கோக்குவாவும் சிறிது கவலைப்பட்டிருந்தனர். ஆனால், கப்பலேறும்போது, அந்த நண்பன் சிறிதும் சலிக்காமல் புட்டிகளை ஈட்டிகள்போல் உடுப்பில் மாட்டிக்கொண்டு குடித்தபடியே, ‘நீங்கள் என்னை ஏய்க்கப் பார்த்தீர்கள். நான் உங்களை ஏய்த்துவிட்டேன். ஆனாலும், புட்டிச்சாத்தன் பெயரால் உங்களுக்கு என் அழியா முழுநன்றி,’ என்று கூறி விடையனுப்பினான்!.