உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(280)

அப்பாத்துரையம் - 35

33. வண்மையும் வீரமும்

படக்காட்சிகளில் நுழைவுச் சீட்டுகள் பெறும் போதும், மின்னூர்திக்குள் இடம் பெறப் போட்டியிடும்போதும் நம் நாட்டில் ஆண்களும் பெண்களும் நெருக்கித் தள்ளிக் கொண்டு அல்லலுறுவதைப் பலரும் பொதுப்படையான காட்சியாகக் கண்டிருப்பர். நமது தன்னலம், 'பெண்டிருக்கும் பிள்ளைகளுக்கும் முதலிடம் கொடுக்க வேண்டும்' என்ற அளவுக்கு இன்னும் பண்படவில்லை. பொது நிகழ்ச்சி களிலேயே இப்படியானால் உயிர்க்கு ஊறுநேரும் காலத்தில் நம் நடைமுறையைப்பற்றிக் கேட்க வேண்டியதில்லை.

மின்னூர்தியில் தீ ஏற்பட்டுவிட்டால் பிற பெண்களும் பிள்ளைகளும் என்று மட்டுமல்ல நம் பெண்டு பிள்ளை களைக் கூடப் பாராமல் நசுக்கித் தள்ளிவிட்டு உயிர்தப்பிப் பிழைக்க விரையும் நிலைக்கு நாம் பண்பாடு கெட்டு விட்டோம். வகுப்பு வேற்றுமை காட்டும் மனப்பான்மையின் ஈனத் தன்மை வேறு.

இந்நிலையில் கீழ்வரும் ஆங்கில மக்களைப் பற்றிய வரலாறு நமக்கு ஓர் அரியபடிப்பினை ஆகும்.

உலகின் மிகப் பெரிய கப்பல்களில் ஒன்றாகிய 'பிர்க்கென்ஹெட்' ஆபிரிக்காக் கரைக் கப்பால் ஒரு பாறையில் மோதி மிக விரைவில் நீரில் முழ்கத் தொடங்கிற்று. கப்பலில் இருந்த ஆயிரக்கணக்கான மக்களில் முக்கால் பங்குப் பேர் போர்வீரர்கள். மற்றவர்கள் பெண்டு பிள்ளை

கள். கப்பல்களிலிருந்து தப்பியோடுவதற்கான படகுகள் நூறு இருநூறு பேருக்குமேல் ஏற்றிச் செல்லத் தக்கவையா யில்லை. கப்பல் தலைவரும், போர்வீரர் தலைவரும் யாது செய்வதெனச் சட்டென்று ஆராய்ந்து முடிவுகட்ட வேண்டி