உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

13

கடம்பன் உள்ளம் அவள் துயர்கண்டு தன் துயர் மறந்தது. எழினி உடலை வாணகை மலர்ப் படுக்கையில் அடக்கம் செய்தாள். கடம்பன் அவளுக்குத் தன்னாலியன்ற எல்லா ஆறுதலும் கூறினான். தன் தனிமை விலக்கவந்த தெய்வ அணங்காக அவளைக் கடம்பன் நேசித்தான்; துணையற்ற தன் வாழ்வின் ஒரே துணையாக வாணகை அவனுடன் இணைந்தாள்.

மாடலன் அடுத்த தடவை வேனில் மாளிகைக்கு வந்த போது, இளவரசன் தன் தனி வாழ்வு ஒரு சிறு குடும்ப வாழ்வாகத் தளிர்ப்பதுகண்டு களிப்படைந்தான். இளங் காதலர்களை அவன் ஊக்கினான். தமிழ் மரபுப்படி அவனே அவர்களைக் காந்தர்வ மணத்தால் இணைத்தான். அவர்களுக்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும் அவனே தருவித்தான். கல்லறை என்று உலகத்தார் கருதிய வேனில் மாளிகை, அவர்களுக்கு ஒரு காதலுலகமாயிற்று.

மாதங்கள், ஆண்டுகள் இவ்வாறாகச் சென்றன. வாணகை ஓர் ஆணையும், ஒரு பெண்ணையும் ஈன்றாள். வேனில் மாளிகையில் பிறந்ததால், கடம்பன் அவர்களுக்கு வேனில் என்றும், தென்றல் என்றும் பெயர்களிட்டான். வேனிலுக்குப் பன்னிரண்டு ஆண்டும், தென்றலுக்கு ஏழாண்டும் ஆயின.

கணவன் உயிர்மாயத்துக்குரிய மாலையைக் கைப்பற்றுவது எப்படி என்ற சிந்தனையிலேயே வாணகை நாள் கழித்தாள். அவளுக்குத் திடீரென ஓர் எண்ணம் தோன்றிற்று. அவள் அதைக் கணவனிடம் கூறினாள். அவனும் மாடலனும் அதை ஆர்வத்துடன் வரவேற்றார்கள். அதன்படி அவள் தன் புதல்வன் வேனிலுடன் வேனில் மாளிகையை விட்டுப் புறப்பட்டாள்.

வாணகை பெண்டிருக்கு ஒப்பனை செய்யும் கலை நங்கையாகத் தன்னை உருமாற்றிக் கொண்டாள். கலைநங்கையின் சிறுவனாகவே வேனிலும் சென்றான். முதலில் அவர்கள் அரசி செந்தாமரையிடம் சென்றனர். அரண்மனை ஒப்பனைத் தொழிலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும்படி அவள் அரசியை வேண்டினாள்.

மகன் இறந்தபின் தான் ஒப்பனை செய்து கொள்வ தில்லையென்று அரசி மறுத்தாள். அவள் தாயன்பு வாணகையின்