உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

அப்பாத்துரையம் - 36

என் தலைவியை மீட்க நான் வேறு யாரையாவது பார்த்துக் கொள்கிறேன். நீ சட்டி துடைக்கத்தானே போ," என்றாள்.

காரெத்தும் லினெட்டும் ஓர் ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது. ஆற்றில் பாலம் எதுவுமில்லையாதலால் ஆழமற்ற ஒரு பகுதியில் தான் கடந்து செல்ல வேண்டும். ஆனால் அவ்விடத்துக்கெதிராக மறுகரையில் இரண்டு வீரர் நின்று ‘இதைக் கடந்து செல்லக்கூடாது' என்றனர். மாது, காரெத்தை நோக்கி, "இவர்களை உன்னால் எதிர்க்க முடியுமா? உனக்கு அச்சமாயிருந்தால் வேறு சுற்று வழியில் செல்லலாம்," என்றாள். காரெத், “அம்மணி!" தங்கள் அவமதிப்பையெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை. ஆயினும் இரண்டு தடவை நான் போரிடுவதைக் கண்டபின்னும் உங்களுக்கு ஏன் இந்த அவநம்பிக்கை,” என்று கூறிக்கொண்டே குதிரையை ஆற்றினுள் செலுத்தினான்.ஆற்று நடுவில் வந்து அவனை எதிர்த்த முதல்வீரன் வெட்டுண்டுபோக, ஆறெல்லாம் அவன் குருதியால் சிவப்பாயிற்று. இரண்டாவது வீரனும் அதுபோலவே காரெத் வாளுக்கு இரையானான்.

மாலையில் அவர்கள் ஒரு மரத்தடியில் கறுப்புக் கவசமணிந்த ஒரு வீரனைக் கண்டனர். கறுப்புச் சேணமிட்ட கருங்குதிரை ஒன்று ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்தது. மரக்கிளையில் பறந்து கொண்டிருந்த ஒரு கரங்கொடியின் பக்கம் ஊதுகுழல் ஒன்று தொங்கிற்று. கறுப்பு வீரன் லினெட்டை நோக்கி, இவன்தான் ஆர்தர் அனுப்பிய வீரனோ! அப்படியானால் குழலை ஊதி என்னுடன் போருக்கு வரட்டும்,” என்றான்.

66

லினெட், 'இவன் வீரன் அல்லன்; கறிச்சட்டி கழுவும் வேலைக்காரன்,” என்றாள்.

காரெத், “அவள் கூறுவது முழுப் பொய்; என் கை சிலகாலம் கறிச்சட்டி கழுவியது உண்டாயினும் என் நாக்கு இவ்வளவு பொய் சொல்லிக் கேட்டதில்லை,' என்று கூறிவிட்டுக் குழலை ஊதினான்.

காரெத்தும் கறுப்பு வீரனும் நெடுநேரம் சண்டை யிட்டனர். இறுதியில் கறுப்பு வீரன் கொல்லப்பட்டு வீழ்ந்தான்.