உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




84

அப்பாத்துரையம்

பாலையாய் விட்ட இப்புன்மை உலகோ இப்பாவியேனுக்குக் கொடுத்து வைத்து!" என்று மனமாழ்கிக் கண்ணீருகுத்தான்.

உலகப் பேரரசை வென்ற வெற்றிவீரனது வெற்றியைச் சிறுமைப் படுத்தின காதற் பேரரசனும் பேரரசியும் ஆகிய அவ் இருவருடைய உயர்தனிக் குணங்களை எண்ணி எண்ணி எகிப்தியரும் ரோமரும் ஆற்றொணாத் துயரெய்தினர்.