உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




156

||_ _ _

அப்பாத்துரையம் - 40

அவள் கொண்டிருந்த மதிப்பு அத்தகைய நட்பாயிற்று. ஆனால், அச்சமயம் அவனுக்கும் அட்லாண்டாவுக்கும் இடையே வயது, வாழ்க்கைநிலை ஆகியவற்றில் மிகுதி தொலை இருந்தது. அவன் இளமை தாண்டியவன்;அவளோ இன்னும் கட்டிளமையை எட்டிப்பிடிக்கவில்லை; அவன் மணமானவன்; அவன் மனைவி அவனிடமே உயிரை வைத்திருந்தாள். அவளோ அவன் படை வீரருள் ஒருபடைவீரன் போலவே நடந்து வந்தாள். இந்நிலை யிலும் ஒருவரையறியாமல் ஒருவர் உள்ளத்தில் காதல் பிறந்தது. ஆனால், அது கைகூடாக் காதலாய்ப் போயிற்று. அட்லாண்டாவை எதிர்க்கத் துணிந்த சில எதிரிகளைத் தாக்கி அவன் உயிர்நீத்தான். அவனைக்கொன்றவர்களை ஒழித்து, அவள் நட்புக் கடன் தீர்ந்தது.

66

மணஞ்செய்வதானால் மெலீகர் போன்ற அஞ்சா உறுதியுடைய வீரனை மணம் செய்ய வேண்டும். அல்லது மணம் நாடாத கன்னியாகவே காலங்கழிக்க வேண்டும்," இதுவே அட்லாண்டாவின் உள்ளுறுதியாயிற்று.

அட்லாண்டாவின் வீரப்புகழ் அவள் தந்தை காதுக்கும் எட்டிற்று. சில அடையாளங்களால் அது தன் மகளே என்று அவன் தெரிந்துகொண்டான். பெண் குழந்தை வேண்டாம்என்று முன்பு அவளை அவன் வெறுத்துத் தள்ளியிருந்தான். இப்போது ஆண்களைவிட அவள் வீரமுடையவளாயிருந்தது கண்டு அவன் அவளை மீண்டும் வரவழைத்துத் தன் மகவாக ஏற்றான்.

அவளை யாராவது நல்ல அரசிளஞ்செல்வருக்கோ, வீரனுக்கோ மணமுடித்துவிடவும் அவன் விரும்பினான்.

அட்லாண்டா தன் உறுதியைத் தந்தையிடம் தெரிவித்தாள். “என்னுடன் ஓட்டப்பந்தயத்தில் ஓடி வெற்றி பெறுபவனையே நான் மணந்துகொள்வேன். அத்துடன் போட்டிக்குவந்தவர் வெற்றிபெறாவிட்டால், அவர்கள் உயிரிழக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் இருக்க வேண்டும்,” என்று அவள் கூறினாள்.

"

அரசன் இக்கடுமுறையை விரும்பவில்லை. ஆயினும், வேண்டாவெறுப்பாக அதற்கு இணங்கினான்.

எத்தனையோ கட்டிளங்காளைகள் வந்துவந்து முயன்றனர். அவர்கள் உயிரிழந்ததுதான் மிச்சம்.அட்லாண்டாவை எவராலும் ஓட்டத்தில் வெல்ல முடியாது என்ற எண்ணம் பரந்தது.