அறிவுச் சுடர்
9
சட்டங்கள் அழியும்; சுவடிகள் அழியா
புலவர் லிட்டன்
அறிவாளிகளின் உரைகள் மட்டுமே பின்னோர்களால் வீணாகச் சிதைக்கப்பட முடியாத செல்வம்.
லாண்டார்
தலைமகனொருவரின் உயிர்க்குருதி போன்றது ஒரு நல்லேடு; அது நறுமணமிட்டுப் பேணப்பட்டு வாழ்க்கை கடந்த பெரு வாழ்வை எதிர்நோக்கிப் பதனம் செய்து வைக்கப்பட்டதாகும்.
(அரியொபஜிட்டிக்கா) மில்ட்டன்
5. கல்வி
இம்மை பயக்குமால்; ஈயக் குறைவின்றால்;
தம்மை விளக்குமால்; தாமுளராக் கேடுஇன்றால்;
எம்மை உலகத்தும் யாம்காணேம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து.
(நாலடியார்)- சமண முனிவர்
கல்வி கற்றவரை எளிதில் நல்வழியில் திருப்பலாம்; ஆனால் ஏமாற்ற முடியாது. எளிதில் ஆளலாம்; ஆனால் அடிமைப்படுத்த முடியாது.
எல்லாம் அறியும் அறிவுதனை விட்டு
புரோ பெருமகனார்
எல்லாம் அறிந்தும் இலாபமங் கொன்றில்லை
திருமூலர் திருமந்திரம்
நான் கற்றுக்கொடுக்க எண்ணுவது அறிவையன்று; அறிவை அறியும் அறிவையே. என் அறிவு வளர வளர, இக்கோட்பாடும் வளர்ந்து வருகிறது.
டாக்டர் ஆர்னால்டு