உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவுச் சுடர்

இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு.

33

திருவள்ளுவர்.

மக்களை இன்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்; ஓயாது உழைத்துச் சாகிறவர்கள், ஓயாக் கவலையால் சாகிறவர்கள், நேரம் போகாமல் சாகிறவர்கள்!

ஒரு பெரியார். பீவரிட்ஜ் அறிக்கைபற்றிக் கருத்துக் கூறுவோருள் மூன்று வகுப்பார் இருக்கிறார்கள். அதை ஆதரிப்பவர்களும் எதிர்ப்ப வர்களும் முதலிரு வகுப்பார்கள். அதை வாசித்துப் பார்த்தவர்கள் தான் மூன்றாவது வகுப்பினர்.

(முதலாம் சார்லஸ் மன்னரிடம் இச்சகமாயிருந்து மக்களைக் கெடுத்து வாழ்ந்த பக்கிங்ஹாம் கோமகளைப் பற்றிய கூற்று).

புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியார்

உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும் - புத்தகத்தைப்

போற்றும் புலவரும் வேறு பொருள் தெரிந்து

டிரைடன்.

தேற்றும் புலவரும் வேறு.

நாலடியார்.

கடவுள் ஆடவர்களையும் படைத்தவர்; பெண்டிர்களையும் படைத்தவர்; ‘பக்கிங்ஹாம்’களையும் படைத்தார்!

டிரைடன்.

இருவகை நல்லார்கள் இருக்கிறார்கள் என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு - நம்மைக் காப்பதற்கென்றே பிறந்தவர் ஒரு சாரார், நம் துன்பங்களை உணரப் பிறந்தவர் மறு சாரார்!

செல்வம் குவிய மனிதர் சிதறுறுங்கால்

தொல்லை பெருகும், சூழ்உலகு கேடடையும்!

ஒரு பெரியார்.