60
அப்பாத்துரையம் - 41
திற்கு அவர்கள் இதனினும் பெரிய தீங்கு தேட வேண்டிய தில்லை. பிள்ளைகள் இயற்கையாகவே சுவடிகளை விரும்பு கின்றனர் - சுவடியார்வம் வாசிப்பார்வமாக, அறிவார்வமாக வளர்கிறது. அவர்களைத் தீமைகளினின்றும் காக்கும் சாவிகளில் இதனினும் சிறந்தது இல்லை.
ஹோரேஸ் மான்.
ஒருவருக்குப் பெருந்துணை தரும் நூல்கள் அவரைச் சிந்திக்கத் தூண்டும் நூல்களே.
தியோடோர்பார்க்கர்.
நீ சிந்திப்பதைச் சிந்திக்கும் நூலன்று, உன்னைச் சிந்திக்க வைக்கும் நூலே வாசிக்கத்தக்கது.
மக்காஷ்.
37. நட்பு
புதிய நண்பர்களைப் பெற முடியாதபோதுதான் மனிதன் வாழ்வின் கலைப்பண்பை இழந்தவனாகிறான்.
எஸ்.வீர்.மீச்செல்.
இளமையில் நண்பரிருப்பது நன்று; முதுமையில் இன்னும் மிக நன்று. இளமையில் எல்லா வளமும் போல, நட்பு வளமும் எளிது. ஆனால் நண்பர் இருப்பதன் அருமையை முதுமையிலேயே காணலாம்.
எட்வர்டு கிரிக்.
நடுநிலை நேர்மையும் ஒத்துணர்வும் உடைய நண்பரைப் பெற்றவர்கள், தங்கள் உளப்பண்புச் செல்வத்தை இரட்டித் தவராவர்.
ராபர்ட் ஹால்.
நட்பு இன்பம் பெருக்குகிறது. துன்பம் குறைக்கிறது. முன்னதை அது இரண்டு மடங்காக்குகிறது.பின்னதைப் பகிர்ந்து கொள்கிறது.
அடிஸன்.