உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவுச் சுடர்

65

மக்கள் விருப்பத்துக்கும், அவர்கள் திருத்தத்துக்கும் ஒருங்கே உகந்த முறையில் அவர்கள் உள்ளங்கள் மீது ஆட்சி செய்யும் சிறந்த ஏடுகள் புனைகதை ஏடுகளே. அவை வாழ்க்கையின் படிப்பினைகளை ஒழுங்கு படுத்தித் திறம்பட மீண்டும் தெளிவான முறையில் எடுத்துக் காட்டுகின்றன; நம் குறுகிய மனப்பான்மை களிலிருந்து நம்மை வெளியே கொண்டுசென்று, பிறரை உள்ளவாறு அறிய வைக்கின்றன. நிகழ்ச்சிகளை வாழ்க்கை வாழ்பவனுக்குக் காட்டுவது போலவே - ஆனால் ஒரே ஒரு வேறுபாட்டுடன் - அவை நமக்குக் காட்டுகின்றன. அவ் ஒரே ஒரு வேறுபாடு யாதெனில், நம் அறிவை மூடியிருக்கும் தப்பெண்ண ஆணவத்திரையை அவை விலக்கிக் காட்டுவதே.

ஆர். எல். ஸ்டீவென்ஸன்.

வரலாற்றில் கூட மிகநல்ல வரலாறு எது? முக்கியமல்லாத நொய்யவரைகளை விட்டுவிட்டு, முக்கியமானவற்றைச் சிறிது மிகைப்படுத்திக் காட்டி, வாய்மையின் தடத்தை நன்கு பதிப்ப வையே. வாய்மையின் உருவம் மனத்தில் இவ்வழியிலேயே பற்றி நீடித்து நிற்கும்.

40. புகழ்

தோன்றிற் புகழொடு தோன்றுக; அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.

மக்காலே.

திருவள்ளுவர்.

புகழார்வம் மக்களுலகில் மிகப் பொதுவாகப் பரந்த உணர்ச்சி என்பதைக் கல்லறை வாசகமரபே காட்டும். தம் வாழ்க்கையில் உயர்பண்பு இல்லாதிருந்தால் கூட அப்பெயரை விரும்புபவர்களே மிகுதி. கல்லறையுடன் மறக்கப்பட விரும்புபவர் மிகமிக அரியர்.

புகழ் வீரச்செயல்களாகிய நன்மலர்களின் மணம்.

கெட்.

சாக்ரட்டீஸ்.