உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
204 ||

அப்பாத்துரையம் - 6



வீரம், அருளிரக்கம், நகைத்திறம், சிறிது சோகம் கலந்த பெருமிதம் ஆகிய பலவகை உணர்ச்சிகளின் கூட்டுருவாக அச்சமயம் அவன் காட்சியளித்தான்.

குந்திராவ் மீளாச் சிறை வாழ்வு பெற்றான். ஹைதர் மாளாப் புகழ் வாழ்வு தொடங்கினான்.

புதிய முறையில் புதிதாக ஆட்சியைக் கைக்கொண்ட தன் அடையாளமாக அவன் மைசூர் நாட்டுக்குக் 'கோதாதாத்' 'புனித நாடு' என்று பெயர் கொடுத்தான். மன்னனைப் பெயரளவில் மன்னனாக மதிப்புடன் வாழ விட்டு, அவன் மன்னனுரிமைகள் யாவற்றையும் கைக் கொண்டு நேரடி ஆட்சி தொடங்கினான்.