பக்கம்:அமிர்தம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உள்ளம் உருகினுள்; அடித்துவைத்த கற்சிலையாகி விட்டாள்.

“அத்தான் சொன்னது கணக்கா முன்னமேயே படிப்புக் கேட்டிருத்தா எதுக்கு இந்த இடுசாமம் வரப் போவுது என் கண்ணே என்னே மறைச்சிருச்சே. காளி ஆத்தா நீதான் கருணைகாட்டவேனும்” .
அப்பொழுதுதான் அவள் குற்றம் வடிவுக்கு விளக்கியது. அண்டிவந்த புதையலைக் கைகழுவ விட்டதற்குத் தனது அறிவின்மையே கராணம் என்பதை நினைக்க நினைக்க அவளுக்கு அழுகை வளர்ந்தது.
“பள்ளிக்கூடத்து வாத்தியாரம்மா கிட்டப்போய் தெனமும் படிப்புச் சொல்லிக்கிட்டா என்ன?” என்ற யோசனை வடிவழகியின் மனதில் மின்வெட்டவே, அன்றே வாத்தியாசம்மாவிடம் சென்று வரலாறு பூராவையும் ஒளிவு மறைவின்றிக் கூறினுள் வடிவு. 

“வடிவு, இன்று முதல் உன் கண்கலங்க நான் இணங்கேன். வீரப்பனை மனக்கவிருக்கும் நீ கொடுத்து வைத்தவள். எண்ணி ஏழெட்டு மாசத்திற்குள் உன் கைப்படவே அத்தானுக்கு ‘லெட்டர்’ எழுதும் அளவுக்கு நான் கற்றுக் கொடுத்து விடுகிறேன். அதற்கு நாளுச்சு” என்றாள் அம்மா.

அவள் தன் மீது இவ்வளவு அன்பு காட்டுவதைக் கண்டு வடிவழகி எவ்வளவோ ஆறுதல் அடைந்தாள்.

“கொண்ட கொள்கைப்படி இனியும் அத்தன் என் சொந்த மச்சான்தானே...”என்று மனதிற்குள் சொல்விப் பார்த்தபோது பெருமிதமும் பூரிப்பும் அவளுக்கு ஏற்பட்டன. ஆனால் மறைந்துபோன வீரப்பனின் கதி...? அவளுடைய பேதையுள்ளம் குமுறியது. .
மாதங்கள் பல கழித்தன. ஒருநாள் பட்டணத்தில் வீரப்பனேக் கண்ட அவன் சொந்தக்காரன் எப்படியோ பின் தொடர்ந்து, அவன் கணக்கு வேலை பார்க்கும் கடை

3 .

35
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/35&oldid=1196170" இலிருந்து மீள்விக்கப்பட்டது