பக்கம்:அமிர்தம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வில்லை. அதற்குள் தன் ஆசை மகள் சுலோவின் பிரிவை எங்ஙனம் அவரால் சகிக்கக்கூடும்?

உயிர்த்துணை போன்ற தன் தமக்கையின் சாவினால் புண்பட்டிருக்கும் தன் நிலையை வெளிக்காட்டிக்கொள்ள சேர்ந்தால் அப்புறம் தந்தையையும் தாயையும் எவ்விதம் தேற்றமுடியும் என்று எண்ணியே வெளியில் தன் துயரத்தைக் காட்டாமலிருந்தாள் வாஸந்தி. தன் பெற்றாேர் இஷ்டப்படி மூர்த்தியை வீட்டோடு வைத்து சிசுருஷை, செய்ய ஆரம்பித்தாள் வாஸந்கி. தன் மனைவியை இழந்த கஷ்டத்தையும் மாளாத துக்கத்தையும் ஓரளவு மாற்றச் சாத்தியமாயின வாஸந்தியின் அன்பு கனிந்த ஆதரவு மொழிகளும், தாய உள்ளத்துடன் செய்த பணிவிடைகளும். தன் அத்தான் எப்படியும் துயரம் நீங்கி அமைதியுடன் இருக்கவேண்டுமென்பதே வாலந்தியின் தனித்த கவலையாக-லட்சியமாக அமைந்தது.

ஆனால் மூர்த்தி-வாஸந்தி இருவரிடையிலும் நிலவிய ஐக்கிய மனப்பான்மையையும் பாசத்தையும் அடிக்கடி கவனித்த அட்வகேட் எப்பாடுபட்டேனும் அவ்விருவர்களை முடிச்சுப் போட்டு கணவனும் மனைவியுமாக்கத் தீர்மானித்தார். காலமும் சமயமும் கூடின. மனம்போலல்லவா வாழ்வு? மூர்த்தி வாஸந்தியின் கைத்தலம் பற்றினான். ஒவ்வொரு அம்சத்திலும் சுலோவின் பிரதிபிம்பம்னெத் தோற்றமளித்த வாஸந்திக்கு முதல் மனேவியின் ஸ்தானம் அளிக்கப்பட்டது. ஆகரிச வாழ்வின் தொடக்கம் அழகாக, அற்புதமாக இணைந்தது; அமைந்தது.

சுலோவைப்பற்றி எண்ணும்போதெல்லாம் அவள் தினமும் வாசிக்கும் அந்த வீணையின் ஞாபகமும் தொடர்ந்தே வரும். அப்போதெல்லாம் வாஸந்தி அந்த வீணையைக் கண்ணால் காணக்கூடாதென்று மறைத்து வைத்து விடுவாள். மேலும், நீண்ட நாட்களாக வீணையைக் குறித்த

80

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/82&oldid=1322913" இலிருந்து மீள்விக்கப்பட்டது