பக்கம்:அமிர்தம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலங்கும். இந்த மாற்றத்தை தன் அத்தான் கவனித்து விட்டால்......? அவள் சந்தர்ப்பத்தைச் சரிப்படுத்திக் கொண்டாள்.

வாலந்தி எதிரேயிருந்த சுலோவின் படத்தினருகே சென்று சிறு குழந்தைபோலத் தேம்பினள். திரும்பவும் ஒரு நாள் தன் கணவன் அந்த வீணையை வாசிக்க உத்தரவு பிறப்பித்தால் தன் கதி என்னாகும் என்பதைச் சற்று சிந்தித்துப் பார்த்தாள்; அன்று தன் கணவன் லவலேசமும் சலனமற்று ரசித்துக்கொண்டிருந்த காட்சியையும் மனத்தில் நினைவுபடுத்திக் கொண்டாள்.

ஆனால் மறுமுறை அவ்வீணையை கையால் தீண்டவும் கூடாது என்பதாக அசைக்கமுடியாததொரு எண்ணத்தை உற்பவித்துக் கொண்டாள் வாஸந்தி. உடனே பித்துப் பிடித்தவள் போல உள்ளே ஓடினாள். கண்முன் காட்சி தந்த வீணையை எடுத்து படீர் என்று அதன் தந்தி ஒன்றை அறுத்துவிட்டாள். அப்போது அவள் இதயமே அறுத்துபோனதுபோன்ற ஒரு உணர்வு எழுந்தது. மறு நிமிஷம் அத்தான் ஊரிலிருந்துவது இந்த நிகழ்ச்சியைக் கண்டால் என்ன செய்வது என்ற கேள்வியும் உடனடியாக மின் வெட்டிச்சென்றது. வாஸந்தி அசையாச் சிலையாய் சமைந்து நின்றாள். கண்ணீர் பிரவகிக்க, சிதைந்த உருவம் மாதிரி பொலிவிழந்து காணப்பட்ட அந்த வீணையை ஆற்றாமையுடன் பார்த்தாள். சூனியகோளமாகத் தோற்றமளித்த உலகமே அவள்முன் சுழன்றது. அவள் தமக்கை சுலோவின் படத்தின்கீழ் மண்டியிட்டு விம்மியழுதாள.

கண்ணீர் நின்றுபோய் எப்போதுதான் தூங்கினாள் என்பதே அவளுக்குத் தெரியாது. எதோ ஒரு சப்தம் அருகில் கேட்ட மாதிரி திடுக்கிட்டுக் கண் விழித்தாள். பக்கத்தில் பார்த்தாள். தன் கணவன் எழுந்து அந்த அறைக் கதவைத் திறந்த பக்கத்து அறைக்குப் போவ-

83

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/85&oldid=1322892" இலிருந்து மீள்விக்கப்பட்டது