பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44



திருத்தங்கியின் காதில் இந்த அடிகள் விழுந்த போது அவருக்குப் பின்னும் ஆனந்தம் உண்டாயிற்று. 'ஆகா! நன்றாகச் சொன்னார். அந்தப்பயலை அப்படித்தான் மட்டந் தட்ட வேண்டும்’ என்று குதூகலித்தார். உடன் இருந்தவர்கள் பாட்டு எப்படி முடியப் போகிறது என்று ஆவலோடு எதிர்பார்த்தார்கள். -

மருத்தன் திருக்குடந்தை வாழை-குருத்தும்
இலையும் இலே பூவும் இலே காயும்இலை, என்றும்
உலகில் வருவிருந்தோர் உண்டு.

'உலகில் எங்கெங்கிருந்தோ மக்கள் வருகிறார்கள். அவர்களெல்லாம் உண்டு உண்டு வாழை மரம் ஒரே மொட்டையாக இருக்கிறது. குருத்தைக்கூட அவசரத்துக்கு நறுக்கிப் போட்டு விடுகிறார்’ என்று பாட்டானது. வாழை மரத்தைக் குறைத்துச் சொன்னாலும், மருத்தனாருடைய அன்னதானத்தை மறைமுகமாகச் சிறப்பித்துச் சொல்லியது. கேட்ட தமிழன்பர்கள் தமிழ் மூதாட்டியார் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போலத் திருத்தங்கியை இகழ்ந்திருப்பதை அறிந்து உள்ளே கிளுகிளுத்தார்கள். .

திருத்தங்கியோ, "நல்ல பாட்டு; இந்த ஏழையையும் ஒரு பொருளாக எண்ணிப் பாடினீர்களே!” என்று சொல்லிக் கீழே விழுந்து வணங்கினார். அதற்குக் காசு பணம் செலவில்லையல்லவா?