பக்கம்:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15


நம் வேலையைச் செய்கிறார். நாம் வாழ வழி அமைக்கிறார், அவர் வாழ்க, அவர் திறன் ஓங்குக அவர் வெல்க! அவர் வெற்றியினால் நமக்கு வெற்றி ஓங்குக! என்று மனமார நாம் கூறுகிறோம். நாம் மட்டுமா? நாடு கூறுகிறது.

நாட்டு மக்களுடைய இந்த மகிழ்ச்சியின் ஒரு சிறு அறிகுறியே இதுபோது கவிஞருக்கு அளிக்கப்படும் பொற்கிழி. இதிலே குவிந்துள்ள ஒவ்வோர் காசும் பேசக்கூடுமானால் மணிக்கணக்கில் பேசும் கவிஞரின் பெருமையை; அதனால் சமுதாயம் பெற்ற பெருமையை, பொற்காசுகள் பேசினாலும் கூட புரட்சிக் கவிஞரின் செவியில் அந்த ஒலி புகாது. எப்படிப் புகும்? அவருடைய செவியிலே ஆலைச்சங்கு, சுண்ணம் இடிக்கும் சுந்தரியின் பெருமூச்சு, பாட்டாளியின் குமுறல், பணமெனும் கொடி கட்டிய படகு வருமா என்று எதிர்பார்த்து ஏங்கும் ஏழையின் ஏக்க மொழி, எழில் ததும்ப இளமை ததும்ப உள்ள மங்கை மஞ்சத்தில் குறட்டை விடும் கிழ மணாளனைக் கண்டு கண்ணீர் விட்டுக் கதறும் ஒலி இவை புகுந்து, கண்களிலே அனலையும் புனலையும் கிளப்பி விட,“ஏடா! தம்பி! எடுடா பேனா கொண்டுவா மைக்கூடு; இந்தக் கொடுமைகளைக் களைந்தே யாகவேண்டும்; இன்றே களைந்தாகவேண்டும் என்று முழக்கமிடுகிறார்! அந்த முழக்கம் இந்தாளில் நாம் பெற்ற கருஊலம்! அவர் நமக்கு அளித்த அழியாத செல்வம் அவர் வாழ்க! வெல்க!!

- சி. என். அண்ணாத்துரை,