பக்கம்:அமைதி, பாரதிதாசன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஐந்து

ள்ளிருளில் ஒரு குடிசையில் ஒற்றை விளக்கு எரிகிறது. தரையிற் குந்தித் தலையிற் கை வைத்துக் கண்ணீர் சிந்துகின்றான் ஒருவன். அறையிலிருந்து ஒருத்தி ஒரு சின்னஞ்சிறு மூட்டையுடன் வெளிவந்து கொல்லைப்புறக் கதவு திறந்து வெளிச் செல்லுகிறாள். அவள் சிறிது தொலைவில் தனியே சென்று ஒரு வேலிப்புறத்தில் தன் கையிலிருந்த மூட்டையை மெதுவாகத் தரையில் வைத்துப் போகிறாள். மண்ணாங்கட்டி அம் மூட்டையைச் சென்று எடுத்துப் பிரித்துப் பார்க்கிறான். அழகிய குழந்தை யென்று அறிகிறான். அவள் மேனி நடுங்குகிறது. குழந்தையைத் தன் மேலுடையால் மறைத்து எடுத்துப்போகிறான்.

சற்றுத் தொலைவில் ஒரு குளத்தைக் காணுகிறான். அதில் குழந்தையின் செந்தீர் தோய்ந்த மேனியைக் கழுவுகிறான். கொப்பூழ்க் கொடியைக் களைகிறான், உடையால் ஒற்றி வேறு உடை போர்த்துக் கைப்புறத்தில் அணைத்தபடி செல்லுகிறான்.

அங்கொரு தொழுவம் காணுகிறான். அதில் உள்ள ஒரு பசுவைக் காணுகிறான், குழந்தையை ஒரு புறம் படுக்கவைத்து விட்டுப் பசுப்பாலைத் துணி நனையக் கறந்து குழந்தையின் வாயிற் பிழிந்து உண்பிக்கிறான். சற்றுத்தொலைவில் குழந்தையுடன் செல்லுகிறான். ஊர்ப் பொதுச் சாவடி ஒன்று காணுகிறான்.

7