பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அவ்வாறு கலந்துவிட்ட சமற்கிருதச் சொற்களைத் தொகுத்து அகரமுதலி வடிவில் நிரல்படுத்தி அவற்றிற்கு இணையான நல்ல தமிழ்ச்சொற்களை வழங்கிட வேண்டுமென்னும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் விருப்பத்தை மாண்புமிகு தமிழ் ஆட்சி மொழி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் அவர்கள் சட்டமன்ற அறிவிப்பாக வெளிப்படுத்தினார்கள். அந்த அறிவிப்புக்கிணங்க செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் தொகுப்பாளர்கள், பதிப்பாசிரியர்கள், உதவிப் பதிப்பாசிரியர், கணிப்பொறியாளர்கள் ஆகியோரைக் கொண்ட அகராதி உருவாக்கக் குழுவினர், தமிழிற் கலந்துள்ள பிறமொழிச் சொற்களை, குறிப்பாகச் சமற்கிருதச் சொற்களைத் தொகுத்து வரிசைப்படுத்தி அவற்றிக்கு நேரிய செந்தமிழ்ச் சொற்களைப் புனைந்து வழங்கினர். அவ்வாறு வழங்கப்பட்ட சொற்களை ஒருங்கிணைத்து நிரல்படுத்தி அகரமுதலி வடிவில் கணியச்சு செய்ததைத் தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்ககத்தினர் அழகிய முறையில் அச்சிட்டு வழங்கினர். இந்த அகராதிப் பணிக்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்கியுதவிக் கொண்டிருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு தொழில்துறை, தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களுக்கும், இயக்ககப் பணிகளில் எங்களை ஆற்றுப்படுத்தும் மதிப்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் திரு. மகேசன் காசிராசன் அவர்களுக்கும், இந்த அகராதியைச் சிறப்பாக உருவாக்கிய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் மேனாள் இயக்குநர் திரு. த.காமராசு அவர்களுக்கும் மற்றும் இயக்ககப் பதிப்பாசிரியர்கள் முனைவர் மா.பூங்குன்றன், திரு.சு.வீரவேலு, முனைவர் தி.பாலசுப்பிரமணியன், திரு.கி.தமிழ்மணி, மேனாள் பதிப்பாசிரியர்கள் முனைவர் மு.கண்ணன், முனைவர் மு.கோமதிவள்ளியம்மை, உதவிப் பதிப்பாசிரியர் திரு. ஏ. காந்தி, தொகுப்பாளர்கள் திரு.வே.பிரபு, திரு.கி.இராமர், திருமதி ஜெ. சாந்தி, முனைவர் வே. கார்த்திக், திருமதி கு.சங்கீதா, கணிப்பொறியாளர்கள் திருமதி க.கஸ்தூரி, திரு.ப.தீபக், மேனாள் கண்காணிப்பாளர் திரு.ஆ.சுந்தரவரதன், ஓவியர் சா.கி.கணேசன், கண்காணிப்பாளர் திருமதி ஆ.மு.பிந்து (ம) நிருவாகப் பணியாளர்கள் பா.சரண்யா, நா.பாலகிருஷ்ணன், வெ.சுதாகர், சீ.ஸ்ரீகாந்த், து.ரஜினிகாந்த், இரா.கற்பகம், ஆ.குணசுந்தரி உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். (கோ.விசயராகவள்)