பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்


அந்தக் காய்கள் இருந்த இடத்தைப் போலவே அவை அமைந்திருந்தனவாம்.



(102) புத்திசாலிகளின் தூக்கம்



துருக்கியின் சர்வாதிகாரியாயிருந்த கமால் பாட்சா அயராத உழைப்பாளி.

தினமும் ஓய்வின்றி பல மணி நேரங்கள் வேலை செய்வாராம்.

தொடர்ந்து 30 மணி நேரங்கள் வேலை செய்ததும் உண்டாம்.

இடையிடையே தேநீர் அருந்தும் வழக்கம் உண்டாம்.

ஒரு நாள் 120 கோப்பைகள் தேநீர் பருகியிருக்கிறாராம்.

கடுமையான உழைப்புக்குப் பின்னர், படுக்கைக்குப் போனால், தொடர்ந்து 24 மணி நேரம் கூடத் தூங்குவாராம்.

குதிரைமீது இருந்தபடியே, நெப்போலியன் சில நிமிஷங்கள் தூங்கி விழிப்பாராம். -

'இத்தனை நிமிடங்கள் தூங்கப் போகிறேன்' என்று கூறிவிட்டு காந்தியடிகள் அத்தனை நிமிடங்கள் தூங்குவ வழக்கம்.

சித்தர்கள், ஞானிகள், அறிதுயில் கொள்வார்கள்.

அதாவது நினைவோடு தூங்குவார்கள்.

மனவலிமை மிக்கவர்களுக்கு அதெல்லாம் சாத்தியமே!