பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254 / அயோத்திதாசர் சிந்தனைகள்

இவ்விடம் விவரிக்கின்றோம். ஓர் குடியானவன் தனது சுபகாலத்தில் பந்தலிடுவதற்கு ஒரு நாளைய முகூர்த்தத்தைக் கண்டு 20 தாம் ஓர் நாளைக்கு ஒரு ரூபா லைசென்சு கட்டி உத்திரவு பெற்று வந்து 19உ பந்தலிட வராம்பித்தவுடன் ஓவர்சியர் வந்து 20உ ஒருநாள் பாஸ்தான் உங்களுக்குக் கொடுத்திருக்கின்றது 19உயில் பந்தல் ஆரம்பிக்கப்படாதென்று கூறி இரண்டு ரூபா கட்டவேண்டுமென நோட்டீசு அனுப்பி பணம் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வகையாக வாங்கவேண்டிய சங்கதிகள் சுதேசக் கமிஷனர்களுக்குத் தெரிந்த விஷயமோ தெரியாத விஷயமோ விளங்கவில்லை. அவ்வகைத் தெரிந்திருக்குமாயின் கமிஷனர் வீட்டின் ஒருநாளைய முகூர்த்தத்திற்கு முகூர்த்த காரியம் நிறைவேற்றுங்கால் பந்தலும் போட்டுக்கொள்ளுவாரா, தாலிகட்டுங்கால் பந்தலும் போட்டுக்கொள்ளுவாரா, சேஷையிடுங்கால் பந்தலும் போட்டுக்கொண்டிருப்பாரா, பந்திபோசனம் அளிக்குங்கால் பந்தலும் போட்டுக்கொண்டிருப்பாரா, ஒருநாளைய முகூர்த்தமாயிருக்க முகூர்த்தநாளை முன்னிட்டு பந்தலிட ஆராம்பித்தநாளையுங் குறித்து கொள்ளுவதாயின் முகூர்த்தம் முடிந்த மறுநாள் பந்தல் பிரிக்கும் நாளையும் சேர்த்து மூன்றுநாளைய லைசென்சு கட்டவேண்டுமென்று ஓவர்சியர் ரிப்போர்ட்டு செய்துவிடுவாராயின் அவர் கூறுஞ்சட்டமே ஆதாரமாமன்றி சுதேசக் கமிஷனர்களின் விசாரிணையும் செயலுமில்லை போலும்.

சுதேசக் கமிஷனர்களின் செயலும் விசாரிணையும் குடிகண்மீதிருந்திருக்குமாயின் ஒருநாளைய முகூர்த்தத்திற்கு ஒரு ரூபா லைசென்சென்று பெற்றுக்கொண்டு முகூர்த்தத்திற்கு முன்னாள் பந்தலாரம்பிப்பதைக் கண்ட ஓவர்சியர் இரண்டுநாளைய லைசென்ஸ் கட்டவேண்டுமென்று ரிப்போர்ட்டு செய்யவும் அப்படியே செலுத்தவேண்டுமென்றும் அதனதிகாரிகள் கூறி வசூல் செய்து இருக்கமாட்டார்கள்.

இத்தகைய லைசென்சுகளுக்கும் அதன் ஆலோசனை முடிவுகளுக்கும் கமிஷனர்களின் கண்ணோக்கம் இருக்குமாயின் சுதேசிகளால் நிறைவேறும் சுபகாரியங்களில் பந்தல் போட ஆரம்பிக்கும் நாளை கண்டும் லைசென்ஸ் வாங்க வேண்டியதா அன்றேல் முகூர்த்தம் நடாத்தும் நாட்களுக்கு மட்டிலும் பாஸ்வாங்கவேண்டியதாவென்பதை விவரமாக் கண்டு விஷயங்களை நடாத்தச் செய்திருப்பார்கள்.

இது விஷயங்களில் கமிஷனர்களின் கண்ணோக்கமில்லாததால் முகூர்த்தநாளைக்கும் லைசென்ஸ் கட்டுவதுடன் பந்தலிட ஆரம்பிக்கும் நாளைக்கும் லைசென்ஸ் கட்டவேண்டுமென நோட்டீசு அநுப்புகின்றார்கள். சுதேசக் குடிகளின் கஷ்டநஷ்டங்களையும் குறைவு நிறைவுகளையும் கண்டறிந்து சீர்படுத்துவதற்கே சுதேச கமிஷனர்களை நியமித்தும் யாதொரு சுகாதாரமும் சுகமுமில்லாவிடின் இவர்களிருந்தும் குடிகளுக்கு சுகமில்லை, இல்லாமற் போயின் சுகக்கேடில்லை என விளங்குகிறபடியால் இனியேனும் கனந்தங்கிய சுதேச கமிஷனர்களவர்கள் குடிகள் மீது கருணை வைத்து அவர்கள் கஷ்ட, நஷ்டங்களை கண்ணோக்கி சுகாதாரமளிக்கவேண்டுமாய்க் கோருகிறோம்.

- 3:47; மே 4, 1910 -


133. விருத்தி எண்ணங் கொள்ளாது வீணெண்ணத்தால் அழித்தல்

தற்காலம் நமது தேசத்தையும் நம்மெயும் ஆண்டுவரும் பிரிட்டிஷாரென்னும் ஆங்கிலேயருட் சிலர் சதா வித்தையிலும் தொழிலிலும், கல்வியிலும் ஆய்ந்திருப்போர் சற்று ஓய்ந்திருக்குமாறு தந்நேயர்களுடன் கானகஞ் சேர்ந்து (பிக்நிக்) என்னும் பல பதார்த்தங்களுடன் புசித்துலாவி இல்லம் வந்து சேர்வதியல்பாம்.

அவைபோல் நந்தேயத்தோருட் சிலர் யாது வித்தையும், யாது வியாபாரமும், யாது தொழிலும், யாது கல்வியும் அற்று வீணே உலாவித் திரிந்து விருத்தியற்ற