பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/597

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம்/549


3. தன்னிடத்து உண்டாகும் மயக்கங்களை அகற்றி அறிவை வளர்த்து விழிப்பு நிற்பதினால் உண்டாகும் இதய சுத்தத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு பிரமசாபல்ய உபநிடதம் என்றும்,

4. தன்னிடத்துண்டாகும் வஞ்சினம், பொறாமெய் முதலிய துற்குணங்களை அகற்றி சகலர் சுகத்தையும் விரும்புதலால் உண்டாகும் இதய சுத்தத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு பிரகதாரண்ய உபநிடதம் என்றும்.

5. தன்னிடத்தில் உண்டாகும் பொய்ப்பொருளாசையை அகற்றி மெய்ப்பொருளை உசாவுவதால் உண்டாகும் இதயசுத்தத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு சுவேதாசுவதாம் உபநிடதம் என்றும்,

6. தன்னிடத்து உண்டாகும் சிற்றின்பச் செயல்களை அகற்றி பேரின்பத்தை நாடுதலால் உண்டாகும் இதய சுத்தத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு ஆசுவலாயாநீய உபநிடதம் என்றும்,

7. தன்னிடத்து உண்டாகும் டம்பச் செயல்களை அகற்றி அடக்கத்தில் நிற்றலால் உண்டாகும் இதய சுத்தத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு மாண்டூகா உபநிடதம் என்றும்,

8. தன்னை வஞ்சித்து துன்பப்படுத்துவோர் துற்செயலுக்கிதங்கி அவர்களை அன்புடன் ஆதரித்தலால் உண்டாகும் இதயசுத்தத்தை விளக்கிக் காட்டும் வாக்கியங்களுக்கு சிவசங்கற்ப உபநிடதம் என்றும்,

எட்டு ஞானபாகை யஷ்டக உட்பொருளை விளக்கியுள்ளார்கள்.

- 2:14: செப்டம்பர் 16, 1908 -

1. தன்னிடத்து உண்டாகும் பற்றுக்களற்று நீதிநெறியின் பற்று நிறைவாம் நிருவாண சுகத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு வல்லி உபநிடதம் என்றும்,

2. தன்னை மறைக்கும் நித்திரையை ஜெயித்து சதாவிழிப்பாம் இரவு பகலற்ற நிருவாண சுகத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்குக் கைவல்லிய உபநிடதம் என்றும்,

3. தன்னை மாறிமாறி பிறவிக்கு ஆளாக்கும் மரணத்தை ஜெயித்து காலகாலனென்னும் நிருவாணசுகத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு பராமாம்ஸ உபநிடதம் என்றும்,

4. தன்னை சதாதுக்கத்தில் ஆழ்த்தும் காமவெகுளி மயக்கங்களை அறிந்து சதானந்த நிருவாணசுகத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு அமுர்தபிந்து உபநிடதமென்றும்,

5. தானே தோன்றுகிறதும் கெடுவதுமாகிய மனதைத் தோன்றாமலும் கெடாமலும் அலையற்ற கடல்போல் அமர்ந்த நிருவாண சுகத்தை விளக்கிக் காட்டும் வாக்கியங்களுக்கு பாஷ்கர உபநிடதமென்றும்,

6. தனக்குள் எழும் மரணபயம் ஜெநநபயமற்று கலங்காமல் நிற்கும் அசைவற்ற தீப நிருவாணசுகத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு சௌனகீய உபநிடதம் என்றும்,

7. தன்னுள் தானாய் திரளும், சாந்தம், ஈகை அன்பென்னும் உண்மெய் உருவின் பேரின்ப நிருவாணசுகத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்குக் கிம்புரோட்சய உபநிடதம் என்றும்,

8. தானே தானே தசநாதமுற்று சுயம்பிரகாச உருவ அகண்ட பார்வையாம் சதாநித்திய சித்தின் நிருவாணசுகத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு சிறவாண உபநிடதம் என்றும்,

எட்டு வீடுபேறாம் அஷ்டகப்பொருளை விளக்கியுள்ளார்கள்.

மனிதனுக்கு உண்டாகும் சதாதுக்கங்கள் அற்று சதானந்தத்தில் லயிக்கும் ஏகமாம் வீடுபேறு இதுவேயாகும்.

தன்னிற்றானே தோன்றும் சிற்றின்ப துற்செயல் விருத்தியால் தேகம் கெட்டு சதாதுக்கத்தில் ஆழ்வதுபோல் தன்னிற்றானே தோன்றும் பேரின்ப நற்செயல் விருத்தியால் உண்மெய் உணர்ந்து சதானந்தத்தில் இருக்கின்றான். மனிதன்