பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


பௌத்தத்தில் அவர் அடங்கி விட்டால், - பைபிள் பக்கம்கூட அவர் நிற்க மாட்டார்.

எல்லோருக்கும் அடங்கியவராகவும் - அடங்காதவராகவும் இருக்கின்ற காரணத்தால், மக்கள் அவரை என்றென்றைக்கும் கவனம் வைத்துக் கொள்ள வேண்டும்.

அய்யன் திருவள்ளுவர், பாதை - தனிப் பாதை! பொதுவான பாதை !யாரையும் எவரையும் வாழ்க்கைப் பயணத்திற்கு அழைத்துச் செல்லும் அறம் சார்ந்த பாதை!

மனிதன் என்பவன் எவனும் - அந்தப் பாதையை நம்பி, தனது வாழ்க்கைப் பயணம் போகலாம்.

அவருடைய பாதையில் - எல்லாருடைய மதச் சுவடுகளும் வந்து கலப்பதால், அவரை - அவரவர் மத உரிமையோடு கொண்டாடுகிறார்கள்!

அய்யன் திருவள்ளுவரது கருத்துக்கள் - எந்த நிலத்திலும் முளைக்கும் தரம் படைத்தவை - உரமுடையவை !

அவருடைய உருவம், எல்லாருடைய மனக் கோயிலிலும் குடியேறிடும் தகுதி பெற்றது ! தனியாக அதற்கோர் கோட்டம் தேவையில்லை - வணங்க - வாழ்த்த !

மறதியுடையவர் மக்கள் என்பதால், கலைஞர் அவருக்கு ஒர் எழுத்துக் கோட்டம் எழுப்பினார். அதைத் தமிழர் என்றும் மறவாரல்லவா?

தமிழ் மக்கள், அப்பெருமகனைத் தமிழனாக எண்ணிய பிறகே - அவர் அய்யன் திருவள்ளுவரானார்!

தமிழ்ச் சாதியிலே ஒருவராகப் பிறந்துவிட்ட அவரை, தரணி இன்று அடையாளம் கண்டு கொண்டது!

உலக மக்கட் சமுதாயத்திற்காக, அழியாத் திருக்குறட் புதையலை வழங்கியவர் அய்யன் திருவள்ளுவர் பெருமான்!

தமிழ்ப் பண்பாட்டின் உயிர் மூச்சை, திருக்குறளிலே வைத்துப் பூட்டி, பொதுமறைப் பேழையாக மக்களிடம் அவர் வழங்கி விட்டார்!

அந்தக் காலக் கருவூலத்தை, பண்பாட்டுப் புதையலை, அறிவுச்-

47