பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


கொடை கொடுக்கும் கையான்,
குள்ளநரிக் கூட்டத்தின் கூற்றம்.
என் தமிழர் மூதாதை.
என் தமிழர் பெருமான், இராவணன் காண் - -
என்ற ஓர் இனமானப் பாடலைப் பாடி
வீழ்ச்சியுற்ற தமிழகத்தில் எழுச்சியைப் பெறச்
செய்த பாவலர் அல்லவா நீர்?

தன்னந்தனியராக, இந்திர சித்தனாக -
ஆத்திகத்தின் சூதுக் கவிதைக் களத்திலே -
சுயமரியாதை வாளேந்தி நின்றவர் யார்?
எம் புரட்சிக் கவிஞர் அன்றோ?
எதிரிகளுக்கு வேல் வடித்துக் கொடுத்த
இலக்கிய வீடணர்கள் முகத் திரையைக் கிழித்து,
வெற்றி வாகை சூடிய ஒர் இன மானக்
கவிஞரல்லவா நம் பாவேந்தர்?

தமிழால் கரு நனைந்தவர்கள் எல்லாம்
தமிழுக்கே பகையாகி
உமிழ்ந்த அவர்தம் கவிதைகளைக் கண்டு
உலகம் சிரித்தபோது,
"இந்திக்குத் தமிழ்நாட்டில் ஆதிக்கமாம்?
நீங்கள் எல்லோரும் வாருங்கள் நாட்டினரே !
செந்தமிழுக்குத் தீமை வந்த பின்னும்
இந்தத் தேகம் இருந்தொரு லாபமுண்டோ? -
என்று, உலக வரலாற்றிலேயே - முதன் முறையாக
மொழிப் போருக்குப் புறப்பாட்டு
நடைப் பாடலை எழுதி செங்களம் காண
தமிழ் மக்களை கட்சி பேதமின்றி அழைத்த,
முதல் புரட்சிக் கவிஞர் - பாரதிதாசனாரைத்
தவிர வேறு யார்? இந்த தமிழ்ப்பற்று
எக் கவிஞனுக்குக் கிட்டியது?

பூ கிள்ளும் நகத்தாலே - புலி உடம்பைக் கீறி,
சூடான இரத்தத்தில் - சந்தக் கவிதைகளை,
சித்திரக் கவிதைகளை, உருவகக் கவிதைகளை,

68