பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

81


ஈடு எதிர்ப்பற்ற ஆதிக்கம் செலுத்திய காட்சிகள்.

எவர் பேச்சுக்கும் இணங்காமல், தன்னிடம் கட்டுப்பட்டுள்ள மன்னன்.

மேரி-முயன்று பார்த்துத் தோற்று, மனம் உடைந்து, அங்கும் இங்கும் அலைந்து மாண்டே போனாள்.

காஸ்டன்-மன்னன் தம்பி, இனித் தனக்கும் அரச பதவிக்கும் சம்பந்தம் இல்லை என்பது புரிந்துவிட்டதால், பெட்டியிலிட்ட பாம்புபோலாகிவிட்டான்.

எதிர்த்தவர்கள்? கல்லறையில்! ஜோசப் பாதிரியார்? நல்ல உழைப்பாளி. அவரும் மறைந்துவிட்டார்.

லூகான் நகர பழங் கட்டிடம், அதிலிருந்து புறப்பட்ட பயணம், பாரிஸ் போற்றும் மாளிகையிலே வந்து முடிந்தது.

ரிஷ்லுவின் வாழ்க்கையைப் பொறுத்தமட்டிலே. மகத்தான வெற்றி என்றுதான் கணக்கிட வேண்டும்.

போட்ட திட்டப்படி காரியம் நடந்தேறியது--ஒரு அரசை, தன் கரத்திலே வைத்து விருப்பப்படி விளையாட முடிந்தது.

பிரபுக்கள் கொட்டமடங்கிவிட்டது. வெளிநாடுகளிலேயும் புகழ் பேசப்படுகிறது. இவைகள் போதுமான சாதனைகள்தான் என்ற மனத்திருப்தி நிச்சயமாக ரிஷ்லுவுக்கு ஏற்பட்டிருக்கும்.

1642-ம் ஆண்டு, டிசம்பர் நாலாம் நாள்' ரிஷ்லு இறந்தான். அன்று மக்கள் மகிழ்ந்து பல்வேறு இடங்களில் 'சொக்கப்பானை' கொளுத்தினராம்!

போப்பாண்டவர் இதைக் கேள்விப்பட்டதும், "ஆண்டவன் ஒருவர் இருந்தால், கார்டினல் ரிஷ்லு அவரிடம் பதில் சொல்லித் தீரவேண்டும். ஆண்டவன் இல்லை என்றால், அவன் கீர்த்தியுடன் வாழ்ந்தான் என்றுதான் பொருள்படும்" என்று கூறினாராம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/81&oldid=1549064" இலிருந்து மீள்விக்கப்பட்டது