பக்கம்:அரசியர் மூவர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76 ☐ அரசியர் மூவர்


னுடைய ஆணை. அதை நிறைவேற்றுவதே தன்னுடைய கடமை. அதுவே தர்மம்' என்ற கருத்தில் இருந்தான் என்று கம்பன் மிக அற்புதமாகச் சொல்வான்.

'அப்பணி தலைநின்றான்'

அவன் இட்ட பணியை மேற்கொண்டான்' என்று பேசுவதனால் இந்தக் கன்யா சுல்கக் கதை எந்த அடிப்படையில் இராகவன் மனத்தில் வேலை செய்கிறது என்பைத நாம் அறிந்துகொள்ள முடியும்.

இதற்கு இதுதான் பொருள் என்று அரண் செய்கின்ற முறையில் பின்னர் இராகவனுடைய கூற்று அமைந்திருத்தல் காண்டல் கூடும். சித்திரகூடத்தில் இராகவன் தங்கியிருக்கிறான். அவனை அழைத்துப்போவதற்காகப்படைகளோடும், நகர மக்களோடும் வந்த பரதன், நிமிர்ந்த சேனையைப் பின்வருக என்று கூறி அவர்களை நிறுத்திவிட்டு, முன்னே தனியாக வந்து இராகவனை வணங்குகிறான்.

பரதனுடைய மாசு படிந்த மேனியையும், தவக்கோலத்தையும் பார்த்து அசந்துபோனவனாகிய இராகவன், அவனிடம் பல கேள்விகளைக் கேட்டு, தந்தையினுடைய இறப்பு முதலானவற்றை எல்லாம் தெரிந்துவருந்தியபிறகு,'நீ இந்தக்தவக்கோலம்பூண்டதன் காரணம் என்ன?, என்று கேட்கின்றான். அப்போது 'நீ வந்து ஆட்சியை மேற்கொள்ள வேண்டும்' என்று பரதன் கூற அதற்கு இராகவன் கூறுவதாக உள்ள பாடல் ஆழ்ந்து சிந்திப்பதற்குரியதாகும்.

"வரனில் உந்தை சொல் மரபினால் உடைத்தரணி நின்னது என்று இயைந்த தன்மையால் உரனின் நீ பிறந்து உரிமை ஆதலால் அரசு நின்னதே ஆள்க' (2485) என அந்தப் பாடலில் சொல்கிறான் இராகவன். 'நீ பிறந்து விட்டதனாலே இந்த ராஜ்யம் உன்னுடையது ஆகிறது' என்று இராகவன் பேசுகிறான் என்றால் என்ன பொருள்? கன்யா சுல்கக் கதையை வேறு முகமாக, வேறு விதமாக இங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/78&oldid=1496742" இலிருந்து மீள்விக்கப்பட்டது