பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பில் சிறப்பான இடத்தைப் பெறுகிறது. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பிற அறிஞர்களின் கட்டுரைகளும் ஒவ்வொரு வகையில் தனிச்சிறப்புப் பெற்ற பொறுக்கு மணிகள்.

உலகில் ஆங்கிலக் கவிஞன் ஷேக்ஸ்பியர் பற்றியும் அவன் படைப்புகள் பற்றியுமே அதிகநூல்கள் எழுதப் பட்டுள்ளன. தொகையில் அவை 50,000க்கும் மேற் பட்டவை. இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பாவேந்தர் பற்றியும், அவர் படைப்புகள் பற்றியும் தரமான 500 நூல்களாவது வெளியாகவேண்டும் என்பது என் விருப்பம்.

நான் நேரில் சென்றபோது செய்திகள் உதவியும், எனது வேண்டுகோளுக்கிசைந்து கட்டுரைகள் அனுப்பியும் இத் தொகுப்பு உருவாவதற்குக் காரணமாக இருந்த பெரியோர்களுக்கு நன்றி.

இந்நூலுக்கு இன்றியமையாத சில புகைப்படங்களை எடுத்தனுப்பிய திருமதி வசந்தா அவர்கள் எனது நன்றிக்குரியவர். பாவேந்தர் நினைவுகளை வெளிக்கொணர் வதில் தணியாத ஆர்வம் காட்டிவரும் அகரம் வெளியீட்டார் தமிழரின் நன்றிக்குரியவர்.

சேலம்-4 முருகு
1-12-80