பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

159

பாவேந்தருடன் ஒருநாள்

ஒலையெனும் கூந்தலினை விரித்து விட்டே

    உலர்த்துகிற தென்னையெனும் பெண்ணே !நீதான் 

காலையிலே குளித்தெழுந்து நிற்கின் றாயோ?

     கன்னியர்கள் சிலபேர்கள் நாக ரீகச் சேலையெனும் பெயராலே அங்க மெல்லாம்
     தெரிகின்ற மெல்லாடை உடுத்தல் கண்டோ சோலையிலே வெட்கமின்றி பன்னா டையைச்

சுற்றிக்கொண் டிருக்கின்றாய்! நாணமில்லை?

என் நினைவிலே இப்பாடல் வரிவரியாக வந்து கொண்டிருந்ததைப் படித்துச் சுவைத்துக் கொண்டு (என்முதுகில் நானே தட்டிக்கொண்டு) இருந்தபோது பொன்னடியான் உள்ளே வாருங்கள்’ என்றா ்ர்.

  • உள்ளே போகச் சொன்னலே சிலபேருக்கு வரும் நடுக்கத்தை நான் நன்கு உணர்ந்தேன்.

பாவேந்தர் அமர்ந்திருந்தார்; அவரைப் பார்த்தேன்! ஆமாம் பார்த்தே விட்டேன்! சான்சனை நேரில் முதல் முதல் பார்த்ததைப்பற்றிப் பாசுவெல், பூதத்தை அதன் குகையிலே பார்த்தேன் ” (I found the giant in his den) என்று இவருக்கு முன்னரே மறைத்திரு பிளேயர் கூறிய அதே சொற்களைக் கூறினார்! அதே போன்று தான் நானும் கூறுகிறேன்.

அவரைப் பார்த்தேன்! அடுத்து அவருடைய மிசைப்பலகையைப் பார்த்தேன்! மருந்து மாத்திரைகள் ; வெண்சுருட்டுகள்; மூக்குக்கண்ணாடி; தூவல் பொடிப்பேழை; மற்றும் பல. பாவேந்தரே உரையாடலைத் தொடங்குகிறார்:

தம்பி! நீ எங்கிருந்து வருகிறாய்?’’

'நான் தருமபுரி மாவட்டத்திலிருந்து...'