பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

63

அருள்நெறி முழக்கம்


இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தின் மூலம் உலகிற்கு எடுத்துக் கூறினார்.

மக்கள் வாழ்வில் அறத்திற்குத்தான் முதலிடம் கொடுக்கப் பெறுதல் வேண்டும். காலப்போக்கில் நாம் அறத்தின் பெருமையை மறந்து வாழ முற்பட்டோம். நாமும் வாழ்வில் தாழ்ந்தோம் என்பதை அன்றாட உலகியல் வாழ்வில் கண்கூடாகக் காண முடிகிறது.

மனிதன் பொருளின் பின்னே செல்கின்றான். சிலவேளைகளில் அதற்கு அடிமையும் ஆகின்றான். ஆனால் பொருள் பெறுதற்குரிய நல்ல வழிகளை இளங்கோ போன்றவர் உணர்த்தியிருந்தும் அதன்வழி செல்லாமல் இடர்ப்படுகின்றான்.

மக்கள் வாய்மைநெறி தவறாது வாழ வேண்டும்; நிலைத்த உயிர்களுடன் நேசம்மிக்க அவற்றைப் பாதுகாத்தலும் வேண்டும். இங்ஙனம் ஒழுகுவாரானால் அவர்க்குப் பொருள் மட்டுமோ கிடைக்கும்? யாரும் அடைய முடியாத எல்லாப் பொருள்களும் கிடைக்கும் என்று அறுதியிட்டுக் கூறுகின்றார் இளங்கோ.

“வாய்மையின் வழாது மன்னுயிர் ஓம்புநர்க்கு
யாவதும் உண்டோ எய்தா அரும்பொருள்"

என்பது இளங்கோ கூற்று. மேலும், ஆசிரியர் அறவுரை கேண்மின்;

“தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்:
பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊனுண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்மின்; தவம்பல தாங்குமின்;
செய்ந்நன்றி கொல்லன்மின்; தீநட்பு இகழ்மின்;
பொய்க்கரி போகன்மின்; பொருண்மொழி நீங்கன்மின்; அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்;
பிறவோ ரவைக்களம் பிழைத்துப் பெயர்மின்;
பிறர்மனை அஞ்சுமின்; பிழையுயர் ஒம்புமின்;
அறமனை காமின்; அல்லவை கடிமின்;