பக்கம்:அரை மனிதன்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

அரை மனிதன்


ளோடு நிம்மதியாக வாழ வேண்டும். அதைக் கெடுக்கக் கூடாது. 'பாவ மன்னிப்பு' தந்தார் இயேசு. பாவத்துக்குத் தண்டனை தரவில்லையே அவர்."

"சரியான ஆளப்பா நீ எதற்கெடுத்தாலும் இயேசுவையே அழைக்கிறாய்.”

"ஆம் பாவச் சுமைதாங்கி அவர். நீ ரயிலடியில் சுமைதாங்கி! நான் இந்தக் குடும்பத்தின் சுமைதாங்கி" என்று கூறி என் கதையை முடித்தேன்.


 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/130&oldid=1521322" இலிருந்து மீள்விக்கப்பட்டது