பக்கம்:அரை மனிதன்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. சீனிவாசன்

63



னால யாருக்கும் குத்தையாக இருக்க முடியாது. அப்படின்னா நான் எப்பவோ யாருக்கோ பயன்பட்டு இருப்பேன். உங்க தம்பி என்னைக் குத்தகையாக வைத்துக் கொள்வதாகச் சொல்லி இருக்கிறான். பணத்துக்கே மசியாத நான் பலத்துக்கா பணியப் போகிறேன். எனக்கு இது தொழில் அல்ல. அவசியத் துக்காக விபசாரம் போனவள்'என்று மேலும் விளக்கினாள்.

"என்னை என்ன அவள் பிச்சைக்காரன் என்று நினைக்கிறாளா? நாளைக்கு அவளுக்கு ஒரு நெக்லஸ் தரப்போகிறேன். அது அவளுக்குத் தரப்போகிற பரிசுப் பணம். மறுக்க வேண்டாம் என்று சொல் அண்ணே" என்றான் ரங்கன்.

என் சுய நலம் அவன் கருத்துக்குத் துணை செய்தது. என் தம்பி அவள் பின்னால் சுற்றுவது எல்லாம் அவள் தனியாக இருக்கிறாள் என்பதால்தான். அவன் என்னை நம்புகிறான். எனக்கும் அவளுக்கும் தொடர்பு இருக்காது என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். ரங்கன் அவளை மொத்தமாக வைத்துக் கொண்டால் அவளைப் பற்றிய பிரச்சினை ஒழியும். அவள் எனக்கு உதவாவிட்டால் போகிறாள். தம்பியைக் கெடுக் காமல் இருந்தால் போதும்.

என் அம்மாவுக்குத் தெரிந்தால் அவள் மனம் எவ்வளவு வேதனைப்படும். நான் அவள் பின்னால் சுற்றுகிறேன் என்று நம்புகிறாள். தம்பி அவளை நாடி இங்கு வருகிறான் என்றால் அவள் மனம் எவ்வளவு வேதனைப்படும்.

அவள் யாரோ எங்கோ கெட்டுத் தொலைந்தாள் என்று கேட்கும்பொழுது ஒரு கதைபோல இருக்கிறது. அதைக் கேட்கவும் சுவராசியமாக இருக்கிறது. அவளிடம் நெருங்காமல் பழகியபோது அவள் என்னைச் சுடவில்லை. அவள் என் தம்பியைச் சுடும்பொழுது அவள் மேல் ஏன் வெறுப்பு உண்டாகிறது. மிக மேல் நிலையில் வாழும் ஒருவனை நான் கீழே கொண்டுவர முடியவில்லை. தோற்றுவிட்டேன். ஏன் பழைய இடத்தைப் பார்க்கவும் வைக்க முடியவில்லை. இவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/65&oldid=1461962" இலிருந்து மீள்விக்கப்பட்டது