பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

99


780 கிலோ எடையை உதைத்துத்தள்ளும் ஆற்றல் அந்த வீரனது காலுக்கு எப்படி வந்தது? பயிற்சிதான்.

உடற்பயிற்சியும், ஒரு முகப்படுத்திய உணர்வுகளும். உள்ளத்தை உணர்வு மயமாக்கி உற்சாகப்படுத்தும் இலட்சிய வேட்கைகளும் தாம், ஒருவரை மிகுந்த சக்தி படைத்த மகா வீரராக மாற்றி விடுகிறது.

பழக்கமும் பயிற்சியுமிருந்தும் சிலரால் ஏன் சாதிக்க முடிய வில்லை என்றால், அவர்கள் மனதால் தயாராகாமல் இருப்பது தான். உடலில்சக்தி இருந்தாலும், பயிற்சி நிறைந்திருந்தாலும், மனதால் அவர்கள் பக்குவப்படவில்லை என்றால், 100ல் 70 அல்லது 80 சதவிகிதம் தான் செயல் பட முடிகின்றது. மீதி 30 சதவிகிதம் வீணாகித்தானே போகிறது.

ஆகவே, சந்தர்ப்பங்கள் தாம் சராசரியான மனிதர்களை, சாதனை வீரர்களாக மாற்றி வைக்கின்றன. அப்படிப்பட்ட அருமையான சூழ்நிலைகளை விளையாட்டுத் துறைகளே வழங்குகின்றன.

சாதனை படைத்து சரித்திரம் படைக்க விரும்பும் இளைஞர்கள், பெண்கள் எல்லாம் விளையாட்டுக்களில் (மனமும் உடலும்) விரும்பி பங்கு பெற்றால், வியத்தற்கரிய சாதனைகளைப் படைத்து விடலாம்.

அப்படிப்பட்ட மறைந்திருக்கும் சக்தியை ஒவ்வொருவரும் வெளிக் கொணர்ந்து விட்டால், இந்த உலகம் இனியதோர் உலகமாக அல்லவா விளங்கி ஒளி வீசும்! இத்தகைய இலட்சிய நோக்கத்துடன் உதவும் விளையாட்டுக்களை நமது இளைஞர் உலகம் பயன்படுத்தி நிறை வாழ்வு வாழ வேண்டும் என்பது தான் நமது ஆசை. ஆமாம்! பேராசையுங்கூட.