பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42


மணியான வாழ்க்கையை மனிதன் வாழ வேண்டு மென்றால் அதற்கு வழிகாட்டிகள் வேண்டாமா? துணைவர்கள் வேண்டாமா? அவர்களைப் போல் தான் விளையாட்டுக்கள் நமக்கு நல்ல துணையாக விளங்குகின்றன.

சும்மா போய் காலத்தைக் கழிப்பதற்காக விளையாடி விட்டு வரலாமே என்று நினைத்துச் சென்று விளையாடுபவர்கள், இன்று எண்ணிக்கையில் ஏராளமாக இருக்கின்றார்கள்.

வெறும் விளையாட்டுக்காக ஏன் போக வேண்டும் என்று விமர்சித்துப் பேசுவோரும் உண்டு.

ஆனால் விளையாட்டுகளுக்கு என்று இலட்சிய நோக்கம் ஒன்று இருக்கிறது என்று யாரும் உணர்ந்து கொள்ளவில்லை. உணர்ந்து கொள்ளவும் முயலவில்லை.

விளையாட்டுக்களின் நோக்கத்தைப் பாருங்கள்.

விரைக, உயர்க, வலிமை பெறுக என்பவை தான் அந்த அற்புத நோக்கங்கள்.

சோம்பித் திரிபவன் தேம்பியே வாழ்வான், சோர்வானது சுகத்தையே அழித்து விடும். மந்தமாக இருப்பவன் கதியும் மங்கியே போகும். இவற்றை யெல்லாம் எண்ணிப்பாருங்கள்.

ஒடுன்ற தண்ணிக் தான் தூய்மையாக இருக்கும். தேங்கி நிற்கின்ற நீர் சகல விதத்திலும் தூய்மையிழந்து கிடக்கும்.

மனிதன் என்பன் இயக்கமுள்ளவன். மிருகங்களும் இயக்கமுள்ளவை தான். என்றாலும், மனித இயக்கத்தில் விவேகம் இருக்கிறது. வேகத்திலும் நிதானம் இருக்கிறது.யூகம் நிறைந்த முன்னேற்ற நினைவு முனைந்து நிற்கிறது.