பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85


தப்பிச் செல்லக் கூடிய நேரங்களில் தடைகளை ஏற்படுத் திய கற்கள், சிறு பாறைகள், மரத்துண்டுகள் போன்றவற்றைத் துாக்கித் தள்ளி விட்டுச் சென்ற பழக்கமே, எடை தூக்கும் போட்டி அறிவை ஏற்படுத்தித் தந்தன.

இந்நாளில் ஏற்பட்டிருக்கின்ற விளையாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும், நமது முன்னோர்கள் பெற்ற வாழ்க்கை அனுக வங்களின் முதிர்ந்த வடிவமாகும்.

'மனிதன் ஒரு வேலை செய்யும் அறிவுள்ள மிருகம்'என் கிறார் சூலி நக்கோடா என்பவர்.

உழைப்பே அவனது வாழ்க்கையாக அமைந்திருந்தது. இந்தியாவில் வேத காலம் என்பது வரலாற்றுக்கு அப்பாற்பட்ட காலம். அப்பொழுது வாழ்ந்த வேத கால மக்களின் வாழ்க்கை முழுவதும், உடல் உழைப்பாகவே இருந்து வந்ததால், இயற்கையாகவே அவர்கள் உடற்பயிற்சி செய்கின்ற வாய்ப்புள்ளவர்களாகவே விளங்கினார்கள். அதன் காரணமாக, அன்றாட வாழ்க்கையை ஆற்றலுடன் நடத்திச் செல்ல அவர்கள் புதிய விளையாட்டையோ உடற்பயிற்சி யையோ உருவாக்கவேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. அவர்கள் வேட்டையாடினார்கள். குதிரை சவாரி செய்தார்கள் தங்களது அன்றாடத் தேவைகளுக்காக இடம் விட்டு இடம் பெயர்ந்து அலைந்த அனுபவங்கள், அவர்களுக்கு உடல் வலிமையையும், உடல் நெகிழ்ச்சியையும் திறன் நுணுக்கங் களையும் உருவாக்கித் தந்தன.

காட்டிலே வாழ்ந்த மக்கள், வீட்டிலே தங்கியிருந்து வேளாண்மை செய்து, வாழ்கின்ற விவரம் புரிந்து கொண்ட நாட்களில், வித விதமான தேவைகள் அவர்களுக்கு உரு வாயின. அந்தத் தேவைகளைத் தீர்த்துக் கொள்ள அவர் கள் அதிகமாக உடல் உழைப்பையே நாடவேண்டியிருந்தது.