பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86


அன்றாடத்தேவைகள் அவைகளைத் தீர்த்துக்கொள்ளும் வேலைகள் எல்லாம் மனிதர்களது மரபுத் தொழில்களாக மாறி வந்தன. உணவு அடிப்படைத் தேவை என்பதால், உழவுத் தொழில் வளர்ந்தது. உடைகள் அவசியம் என்பதால், நெசவுத் தொழில் வளர்ந்தது. தற்காப்பு அவசியம் என்பதால், போரிடு வதற்கான ஆயுதங்கள், தற்காப்பு இடங்கள், வாகனங்கள் முதலியன உருவாக்கும் தொழில் நிலைகள் விரிவடைந்து கொண்டே சென்றன.

தொழிலே வாழ்க்கையாகவும் வாழ்க்கையே தொழிலாகவும், மாறி அவர்களை ஆழ்த்திவிட்டிருந்தன.

ஆதிகால மக்களின் அன்றாட வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்திச் செல்ல உதவிய தொழில்களிலிருந்தே பல விளையாட்டுக்கள் தோன்றி வளர்ந்து, செழித்தோங்கி, சரித் திரம் படைத்தன என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன.

"உழவுக் காலங்களிலும் அறுவடைக் காலங்களிலும் ஒன்று கூடி பாட்டுப் பாடி வேலைகளைத் தொடங்கிய முறை களே கடவுள் வழிபாடாகவும்; காணிக்கை தரும் கடன் களாகவும், நடனமாடுகின்றன நிகழ்ச்சிகளாகவும், விருந்து படைக்கும் விழாக்களாகவும் வடிவெடுத்துக் கொண்டிருக் கின்றன.

கூட்டங் கூட்டமாக சேர்ந்து வாழத்தொடங்கிய மக்கள், தங்களது தற்காப்புக்காகப் போரிடும் சாதனங்களையும் பஐங்கர ஆயுதங்களையும் படைத்துக் கொள்ள தலைப் பட்டனர். பல கூட்டங்களுக்கு இடையே அடிக்கடி போர்கள் நடத்தி வந்ததே. அவர்கள் வாழ்க்கையின் நோக்கமாகவும் இருந்தன.

மிகப் பழங்காலத்தில் ஒருவரோடு ஒருவர் செய்து கொண்ட துவந்த யுத்தமே, இன்று மல்யுத்தம் போட்டி