பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 2 அர்த்த பஞ்சகம் என்று இலக்குமியை முன்னிட்டுப் பிரபத்தி செய்வதைக் காணலாம். இந்த ஆழ்வார், கல்தேன் பாய்ந்தொழுகும் கமலச் சுனை வேங்கடவா! அற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட்கொண்டருளே (பெரி. திரு. 1-9:9) என்று திருவேங்கடமுடையானையும் சரணம் அடை வதைச் காணலாம் இவர் திருக்கண்ணபுரத்துக் கரு மணியிடமும் சரண் அடைந்தமையை 'அம்மானை, அமுதத்தை...அடியேன் அடைந்து உயந்து பிழைத்தேனே' (8-9:2) என்ற பாசுர அடியால் அறியலாகும். சரணாகதி தத்துவத்தின் தந்தை போன்றவர் பிரபந் நர்களின் தலைவரான நம்மாழ்வார். அவர் தம்முடைய திருவாய்மொழியில் 'நம் பெருமான் அடிமேல் சேமங் கொள் தென்குருகூர்ச்சடகோபன்' (5-9:11) என்றும், 'கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சட கோபன்' (5-8:11) என்றும் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளுகின்றார். 'எனக்கு நின்பாதமே சரணாகத் தத்தொழிந்தேன்’ (5-7:10) என்று எம்பெருமான் தமக்குச் சரணாக அமைந்தமையையும், 'உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே' (6-10:10) என்று தாம் எம்பெருமான் கழல் இணைகளில் சரணாகப் புகுந்தமையையும் புலப்படுத்து கின்றார். இவ்விடத்தில், 'சேவியக்கல் சேஷபூதன் இழியுங் துறை, பிரஜை முலையிலே வாய் வைக்குமாப் போலே' (முமுட்சு - 147)