பக்கம்:அறநிலையங்கள், சொற்பொழிவு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

அறநிலையங்கள்

வியாபாரிகளில் பலர், தருமகாணிக்கை வசூல் செய்கிறார்கள். வசூல் செய்து, கோயில்களுக்கு அளித்தீர்களே தவிர, யாராவது ஒருவர், உயர்தரப்பள்ளி கட்டியிருக்கிறீர்களா? ஆஸ்பத்திரி கட்டியிருக்கிறீர்களா? வாசகசாலை அமைத்திருக்கிறீர்களா? அதுதானே இல்லை!

எது பாவம்? எது புண்ணியம்? என்று பலருக்குத் தெரியாது. ஒரு வீசைக்கு 40 பலம் என்று சொல்லிவிட்டால் போதுமா? அந்த 40 பலம் கல் இருக்கிறதே, அது சரியாய் இருக்கிறதா, என்று பார்த்துவிட்டால் மட்டும் போதுமா? சர்க்கார் முத்திரையிட்ட பின்னர், ஏதாகிலும் குது செய்திருக்கிறார்களா என்றும் பார்க்க வேண்டாமா?

மிகுந்த ஒளிதரும் காஸ் (Gas) விளக்குகள், பொய்க்கால் குதிரை, திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வரம் ஒருபக்கம்; மற்றொரு பக்கம், திருவீழிமலை சகோதரர்கள், வாணவேடிக்கைகள் இவைகளைக் கொண்டு, திருவிழா வெகு விமரிசையாக நடக்கிறது.

இன்கம்டாக்ஸ் ஆபீசுக்குக் கணக்குக்காட்டுவதற் காக, மூன்றுவிதமான கணக்குகள், மூன்றுவிதமான கணக்குப்பிள்ளைகள். பொய்க் கணக்கெழுதி வெற்றி பெற்றுவிட்டால், ஆண்டவனுக்கு உற்சவத்தைப் பரிசாக அளிக்கிறார்கள்; சர்க்காரையும் ஏமாற்றுகிறார்கள்.

தலையிலே முக்காடிட்டுக்கொண்டிருக்கும் 50 வயது தாய்மார்களைத் தவிர, 30 வயதுப் பெண்கள் யாராவது ஆண்டவனையா பார்க்கிறார்கள்? ஆண்டவனின் கழுத்திலே இருக்கும் வைரப்பதக்கத்தைப் பார்த்தாயா? என்று, ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுகிறார்கள். அதேநேரத்தில் வைர வியாபாரி, எத்தனை காரட் வைரமப்பா அது? சுராஜ்மல்லுக்கு அதைப்போன்ற வைரத்