டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்
39
- மண்குடிசை, பக். 216
என்று மண்குடிசையில் மொழிகின்றார். மனைவி என்பவள் மந்திரியாகவும், வைத்தியராகவும், மனநோய் மருத்துவராகவும், செயலாளராகவும் குருவாகவும் திகழ வேண்டும். என்பதைக் குமரவேல்வழித் தெளிவுறுத்துகின்றார். ஒரு கணவன் மனைவியிடம் எதிர்பார்ப்பது அவளுடைய உண்மையான - ஆழ்ந்த அன்பையே என்பதை மெய்யப்பன் மூலம் படைத்துக் காட்டுகின்றார். மனைவி என்பவள் கணவனிடம் குற்றம் கண்டபோது அவனைத் திருத்தப்பாடுபட வேண்டும். அவனிடம் குறை இருந்தால் அந்தக் குறையை வெறுக்க வேண்டுமே ஒழிய அவனை வெறுக்கக் கூடாது. இப்படி அவனிடம் குறை கண்டு திருத்தும் முயற்சியில் ஈடுபடும் போது அந்த முயற்சி அளவானதாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றார்.
- நெஞ்சில் ஒரு முள், பக். 231-232
அப்படிப் போராடி அவனைத் திருத்த முடியவில்லை எனின் அவனை வெறுக்காமல், அவனுடைய இன்பத்தில் இன்பம் கண்டு துன்பத்தில் துன்பம் கொண்டு அவனுடைய அழிவில் அழிவதில் இன்பம் காண வேண்டும் என்பதை,