புலவர் என்.வி. கலைமணி
169
அம்மா! உனது ரகசியத்தை அறிவதற்கு, நான் நெடுந்துரம் வந்திருக்கிறேன்.
நான் செல்லுகின்ற நீரோடையின் இரு மருங்கிலும் - வாளெடுத்தப் போர் வீரர்களைப்போல, நாணற் புற்கள் கரையில் முளைத்திருக்கின்றன.
இப்போது நான் மிகவும் களைத்து விட்டேன். ஒரு நாணற் புல்லின் அடியிலே நான் இளைப்பாறுகிறேன்.
அந்தப் புல்லின் தண்டின்மேல், ஒரு வானம்பாடி இசை ஓசை எழுப்பிற்று?
அதன் கண்டத்தில், அரசவையில் பாடுகின்ற வித்துவானின் குரல் தோற்றமளித்தது!
அதன் கவிதையில், பாவேந்தர் சுப்புரத்தினத்தின் புரட்சி யாப்பும் இருந்தது.
அதன் தாளத்தில், சுப்பிரமணிய பாரதியாரின் கும்மி இருந்தது.
அதன் இசையலையில், தாயே உன்னுடைய தேனமுதத் தாலாட்டும் இருந்தது;
அந்த வானம்பாடி பாடிய பாட்டுதான் - என்ன?
'வீணையோடும், சுரமண்டலத்தோடும், மத்தளத்தோடும் நடனத்தோடும் - யாழோடும் தீங்குழலோடும் - ஓசையுள்ள இசைத் தாளங்களோடும், உரிமையைப் பாடிக்கொண்டு வாருங்கள்' என்ற பொருள்தான்- அதன் டாட்டிலே ரீங்காரமிட்டது.
இந்த இசையின் கூர்மையால், எனதுள்ளம் பொத்தலானது. அதிலே; அந்தக் கருத்துக்கள் குடித்தனம் செய்தன.
மலைகளில் சந்தனத்தை -
மேகத்தில் நீரை -
கடலில் முத்தை -
வானில் நிலவை -