புலவர் என்.வி. கலைமணி
39
உண்மையில் அது பழையதன்று புதிய அறிவு வளர்ந்திருக்கிறது என்றே பொருள்.
ஆனால்; இயேசு புத்தர்-நபி.வள்ளுவர் இவர்களுடைய கருத்து, நாள்தோறும் புதிது புதிதாகத் தெரிவானேன்?
இந்த இடத்தில்தான், காலம்.இவ்வளவு நோஞ்சானாக இருக்கிறதே, என்ற கேள்வி எழுகிறது.
அந்தக் காலத்திற்குத் தீனியிட்டு வளர்க்க வேண்டிய பொறுப்பு, அறிஞர் பெருமக்களிடம் இருப்பதாகத் தெரிகிறது.
காலத்திற்குத் தேவையான உணவை-அறிஞர் அண்ணாவைப் போல் அளிப்பவர்கள் இனி இல்லை.
கட்சிக் காதல் அல்ல இது அறிவின் மீது நம்பிக்கை வைத்து, வாழ்க்கை நடத்துகின்றவன் செய்கின்ற சரியான விமர்சனம்.
அண்ணா பிறந்தது 1909ல்! அவர் அறிவு தோன்றியது எப்போது?
அண்ணா இறந்தது 1969ல்! அவர் நினைவு முடிவது எப்போது?
இந்த இரு வினாக்களுக்கும் இன்றைய தினமிருக்கும் வேதாந்திகளாலேயே பதில்கூற முடியவில்லை.
எனவே, அறிஞர் அண்ணாவைத் தாக்கி எழுதுகின்ற சித்தாந்திகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை.
எந்த விதையால், அண்ணா தன்னை மனிதத் தோட்டத்தின் நடுவில், நிழல் தரும் தருவாக, ஆக்கிக் கொண்டார்?
அந்த விதையை, முதன் முதலில் போட்டக் காலத்தை நான் கையெடுத்துக் கும்பிடுகின்றேன்.
ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு ரக விதையால் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான்.
கலை, ஓவியம், இசை, பேச்சு, எழுத்து, இவை அத்தனையும், மனிதத் தோட்டத்திற்கு நடுவில் விழுகின்ற விதைகளாகும்.