90
அறிஞர் அண்ணா நினைவஞ்சலி
இறகு
அன்பின் உருவே!
அழகின் ஆரம்பம் எனக்குத் தெரியாது.
உன்னைப் பார்த்தபோது முடிவு இப்படித்தான் இருக்குமென்று புரிகிறது.
உன்னாலானவைகள் ஆயிரங்கள் இருக்கலாம்! அதிலே நானும் ஒன்று:
என்னையேன் பறவைகளின் சிறகுகளிலே இறகாக்கினாய்?
மயிலின் இறகாக இருந்திருந்தால், புள்ளி நிறக் கொண்டு தென்றலுக்குக் கவரி வீசி, மகிழ்ந்திருப்பேன்!
கொக்கின் இறகாக என்னை ஆக்கி விட்டாயே! தாயே! அந்த கொக்கு ஒருநாள் வானத்தில் பறந்தது.
அது எவ்வாறெலாம் போனதோ, அவ்வாறெலாம் அதனைத் துக்கிக் கொண்டு நான் செல்ல வேண்டும்.
கொக்கு என்னைத் தன் விருப்பத்திற்கேற்ப ஆட்டி வைக்க எண்ணுகிறது!
அதற்கு நான் அடிமையா அம்மா?
இறகில்லா விட்டால் - சிறகு இல்லை!
சிறகு இல்லாவிட்டால் - கொக்கே இல்லையே!
ஆயிரம் இறகாலானது சிறகு!
இரண்டு சிறகாலானது கொக்கு!
சிறகைத்தான் கொக்கும் கவனிக்கிறது! இறகைப் பற்றி
இறகு ஒன்று உதிர்ந்தாலும் பரவாயில்லை, என்று - சிறகு நினைக்கிறது!
உதிர்ந்த இறகோ, சகதியில் அழுகிறது!