பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி



ஒரமைப்பும் தொண்டர்களின்றி விளங்காது! செயல் படமுடியாது!

விசித்திரமானவள் நீ! என்னைக் கொண்டே அரசியலை விளக்குகின்றாயே!

அதனால்தான், நான் இறகுகளை அடக்கமாக கவனமாக, சிறகுக்குள் மடக்கி ஒற்றுமையாக வைத்திருக்கிறேன் என்றது கொக்கு:

தாயே! அது உன் படைப்பல்லவா? அதற்குரிய தகுதி! திறன்! அறிவு! அத்தனையும் உன்னைவிட்டால் வேறு யாருக்கம்மா உண்டு? இருக்கிறது?

பூண்டு

இனியவளே! இன்பத்தின் அகராதியே!

ஒரு முறைதான் நான் உன்னைப் பார்த்தேன்!

எங்கே என்று கேட்கிறாயா; என்னை!

இருபாறைகட்கு இடையே, நான் பூண்டாக முளைத்து இருந்தபோது!

என்னைச் சுற்றிக் கூழாங்கற்கள் இருந்தன!

தினந்தோறும் ஒரு தவளை, நானிருக்கும் பக்கத்தில் வந்து அனலுக்கு ஒண்டும்.

அதை நீயும் தானே பார்த்தாய்!

பாறையிலே தேங்கியிருக்கும் நீரில் ஒரு நாள் - அது முட்டைகளை இட்டது!

தவளையை அதற்குப் பிறகு காணவில்லை!

வெயில் காய்ந்தது! பாறை நீர் வற்றியது!

எப்படியோ முட்டைகள் பாறையில் இடுக்கில் சென்றன! வசந்தமும் - கோடையும் மாறி மாறி வந்தன!