92
அறிஞர் அண்ணா நினைவஞ்சலி
ஒரமைப்பும் தொண்டர்களின்றி விளங்காது! செயல் படமுடியாது!
விசித்திரமானவள் நீ! என்னைக் கொண்டே அரசியலை விளக்குகின்றாயே!
அதனால்தான், நான் இறகுகளை அடக்கமாக கவனமாக, சிறகுக்குள் மடக்கி ஒற்றுமையாக வைத்திருக்கிறேன் என்றது கொக்கு:
தாயே! அது உன் படைப்பல்லவா? அதற்குரிய தகுதி! திறன்! அறிவு! அத்தனையும் உன்னைவிட்டால் வேறு யாருக்கம்மா உண்டு? இருக்கிறது?
பூண்டு
இனியவளே! இன்பத்தின் அகராதியே!
ஒரு முறைதான் நான் உன்னைப் பார்த்தேன்!
எங்கே என்று கேட்கிறாயா; என்னை!
இருபாறைகட்கு இடையே, நான் பூண்டாக முளைத்து இருந்தபோது!
என்னைச் சுற்றிக் கூழாங்கற்கள் இருந்தன!
தினந்தோறும் ஒரு தவளை, நானிருக்கும் பக்கத்தில் வந்து அனலுக்கு ஒண்டும்.
அதை நீயும் தானே பார்த்தாய்!
பாறையிலே தேங்கியிருக்கும் நீரில் ஒரு நாள் - அது முட்டைகளை இட்டது!
தவளையை அதற்குப் பிறகு காணவில்லை!
வெயில் காய்ந்தது! பாறை நீர் வற்றியது!
எப்படியோ முட்டைகள் பாறையில் இடுக்கில் சென்றன! வசந்தமும் - கோடையும் மாறி மாறி வந்தன!