உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

538 காற்றறை அழற்சி

538 காற்றறை அழற்சி அகப்பட்ட காற்று இறுக்கப்பட்டு வெளியே செலுத்தப்படும். இவ்வகை அமைப்பில் தனிப்பட்ட உள்வழிக் கட்டுப்பாட்டிதழ் இல்லை. இவ்வகைக் காற்றழுத்திகள் சிறு இயக்கங்களுக்குப் பயன்படு கின்றன.(படம்-3). மையவிலக்குக் காற்றழுத்திகள் (centrifugal compressor). படம்-4இல் இதன் எளிய அமைப்புக் காணப்படுகிறது. இதன் முக்கிய பகுதிகள்: சுழலியு டன் இணைக்கப்பட்டுள்ள எண்ணிறைந்த வரிசைப் படுத்தப்பட்ட அலகுகள், சுற்றும் தூண்டியக்கி (இதில் ஆரவடிவ அலகுகள் (radial vanes}பொருத்தப் பட்டிருக்கின்றன). சுழலும் தூண்டியக்கியைச் சுற்றிச் சூழ்கலம், ஆர அமைப்பிலுள்ள சூழ்கலத் துடன் இணைந்திருக்கும் விரவி (diffuser) ஆகியவை யாகும். மைய குறைந்த திசை வேகத்தில் தூண்டியக்கியின் மையத்தில் வளிமண்டல அழுத்தத்தில் காற்று உள் ளிழுக்கப்படுகிறது. சுழல் தூண்டியக்கியின் விலக்கு விசையால், காற்று ஆரத்திசையில் தூண்டி யக்கியின் அலகுகளால் விலக்கப்படுகிறது. தூண்டி யக்கியுள் செல்லுகையில் காற்றுக்கு ஆற்றல் அளிக்கப் பட்டு அழுத்தம், வெப்பநிலை, திசைவேகம் ஆகியவை அதிகரிக்கப்படுகின்றன. இடைப்பட்ட சூழ் கனஅளவில் அழுத்தத்திற்குள்ளான காற்று, சிதறு கலத்தீன் விரியும் பாதைகளுக்குச் செலுத்தப்படு கிறது. இதனால் காற்றின் இயங்காற்றல் அழுத்த நிலையாற்றலாக மாறுகிறது. காற்றின் நிலையியல் அழுத்தம் (static pressure) அதிகரிக்கிறது. இந்நிலை யில் மிகு அழுத்தத்திற்குள்ளான காற்று வெளிவழி மூலமாக வெளியேறுகிறது. பயன்கள். காற்றழுத்தியைப் பெரும்பாலும் அனைத்துத் தொழிற்சாலைகளும் பயன்படுத்துகின் றன தன் பயன்கள் வண்ணப்பூச்சுச் சிதறி அடித் தல், தூய்மைப்படுத்துதல், தன்னியக்கமாக உளி களை இயக்கி மலைப்பாறை துளையிடு கருவிகளை இயக்கல், மோட்டார் ஊர்திகளின் டயர்களில் காற்று நிரப்பல், குளிரியல் - காற்றுச் காற்றுச் சீராக்கல், வேதிக் கூடங்களில் நிகழ்ச்சிகளை ஊக்குவித்தல், வளி விசை யாழி, உலை, திடீர் நிறுத்திகள் (brakes), குழாய் களின் பொருள்களைக் கையாளல் கடத்தல், எரி பொருட் சிதறல், நுண்துகளாக்கக் கூடிய பொறி களின் இயக்கம். எண்ணெய்க் கிணறுகள், ஊ துலை, அச்சுவகை எந்திரங்களை இயக்கல் எனப் பலவகைப் படும். கே.ஆர்.கோவிந்தன் நூலோதி. Baumeister, A.Avallone, Baumeister III, Marks Standard Hand Book for Mechanical Engineers, Eighth Edition. McGraw - Hill Book Company, New York, 1978. காற்றறை அழற்சி மனிதனின் தலை இணை யான எலும்புகளில் வலம், இடம் என இரண்டு கன்ன எலும்புகள், இரண்டு முன் தலை எலும்புகள், இரு புடைப்புகள் கொண்ட எத்மாய்டு (பறவை எலும்பு), ஸ்பினாய்டு ஆகியவை காற்றறையில் உள்ளன. இவற்றில் சுரக்கிற நீர் மூக்கறையின் முன், மேல், பின் பகுதிகளில் வடிந்து வெளியேறுகிறது. இதே வழியாக மூக்கிலிருந்து நுண்ணுயிரிகளும் சீழும் காற்றறைக்குப் பரவலாம். சாதாரணமாகக் காற்றறை அழற்சி தும்மலுடன் தொடங்குகிறது. தூய்மையில்லாத நீர் உள்ள குளம், குட்டை, கடல்களில் குளிக்கும் போதும் நீச்சல் குளத்தில் தலை கீழும் கால் மேலுமாகக் குதிக்கும் போதும் மூக்கினுள் புகுந்த நீர் காற்றறைகளில் புகுந்து விடுகிறது. மழையில் நனைந்தால் சிலருக்குத் தடுமன் பிடிக்கிறது. தலை, மூக்கு, தொண்டை குளிர்ந்தவுடன் மூக்கிலும், தொண்டையிலும் எப்போதும் தங்கியுள்ள நுண்ணுயிரிகளும் வைரஸ் களும் வீரிய அழற்சியுண்டாக்குகின்றன. தூய்மை யற்ற நீரிலுள்ள வேறு நுண்ணுயிரிகளும் சேர்ந்து அழற்சியின் கடுமையை மிகுதியாக்குகின்றன. உடலில் எதிர்ப்பாற்றல் குறைந்தவர்களும் உடல் தளர்ச்சி உள்ளவர்களும் எளிதில் தாக்கப் படுவர். ஒவ்வாமை உள்ளவர்களுக்கு, சாதாரணத் தும்மல், தடுமனில் தொடங்கிச் சைனஸ் அழற்சியில் முடிவது எளிது. உடல்நலம் குன்றியவர்களுக்குப் பல் ஈறுகளில் சீழ்பிடித்திருந்தால் அதன் வேர் வழியாகச் சீழ் கன்ன எலும்புக்குள் சென்று, தீவிர அழற்சியாகி, கெடு நாற்றத்துடன் மூக்கில் சீழ்வடியும். பெரிய அடி னாய்டு சதை உள்ள குழந்தைகளுக்குத் தொண்டை யிலிருந்து மூக்கினுள் சளி புகுந்து காற்றறைகள் தாக்கமடைகின்றன. மூக்கினுள் விழுதுகளுடன் சீழ் பிடித்திருந்தாலும் காற்றறைகளில் எளிதாகச் சீழ் பரவி விடுகிறது. மூக்குத் தண்டு வளைந்தவர்கள் பொடி போடும் பழக்கத்தில் மூக்கை உறிஞ்சுவர். அப்போது சைனஸ் ஏற்பட அழற்சி வழி உண்டாகிறது. முனைப்பான கன்ன எலும்பு அழற்சி 90% மூக்கி லிருந்தும் 10% பற்களிலிருந்தும் தோன்றுகிறது. பிற காற்றறைகளிலும் மிகுதியாகத் தனியாகத் தாக்கமுறு வது கன்ன எலும்பு ஆகும். காற்றறை வலியில் கன்னத் தில் வீக்கம், மூக்கிலிருந்து கட்டியாக மஞ்சள் நிறத் துடன் சளி ஆகியவை இருக்கும். உடனடி மருத்துவ மும் ஒய்வும் தேவை. வலிக்கு ஆஸ்ப்ரின் அல்லது பாரசட்டமால், நுண்ணுயிர் எதிர் மருந்துகள், வீக்கம் வடிய மாத்திரை போன்றவை சாப்பிட வேண்டும். சுடுநீர் ஒற்றடம், மெந்தால் கலந்த நீர் ஆவியை முகர்தல், மூக்கினுள் வீக்கம் குறையச் சொட்டு மருந்து ஆகியவற்றைப் பயன்