கேழ்வரகு 365
பெரும் செல்வந்தர்கள்: அனைத்துப் பணக்காரர்களி லும் அதிகம் படித்த பணக்காரர்கள் என்று குறிப் பிடுகிறார். கேழ்வரகு த.தெய்வீகன் இதன் தாவரவியல் பெயர் எலூசைன் கோரகானா (Eleusine coracana) ஆகும். இது போயேஸி எனப் படும் ஒரு வித்திலைக் குடும்பத்தைச் சேர்ந்தது. கிரேக்க மொழியில் எலூசைன் என்ற சொல், தானியங்களுக்குரிய பெண் தெய்வத்தைக் குறிக்கும். இதற்குப் பல வட்டாரப் பெயர்கள் உண்டு. அவை ராகி, கேப்பை, ஆரியம் என்பன. இந்தியாவிற்கு அப்பாற்பட்ட நாடுகளில் இதை ஆப்ரிக்கத் தானியம் அல்லது விரல் தானியம் என்பர். இலங்கையில் இப் பயிரைக் குருக்கன் என்று சொல்வதால், இதன் சிற்றினப் பெயரான 'கோராகான்' அதன் தழுவலாக இருக்கலாம் எனக் கருதலாம். கேழ்வரகு 365 தோற்றம். எலூசைன் இனத்தைச் சேர்ந்த சிற்றினங்களில் 5 இந்தியாவில் காணப்படுகின்றன. அவற்றில் முக்கியமானவை எ. கோரகானா, ET. இண்டிகா, எ. ஆப்ரிகானம் ஆகும். எ. கோர கானா சிற்றினம், எ. இண்டிகாவிலிருந்து வந்திருக்க வேண்டும் என்ற கருத்து பல ஆண்டுகளாக நிலவி வந்தது. இந்நிகழ்ச்சி ஆஃப்ரிக்காவிலோ, இந்தியா விலோ நிகழ்ந்திருக்கலாம் என்று வல்லுநர்கள் கருது கிறார்கள். ஆஃப்ரிக்க - ஆசிய வகைகளும், ஆஃப் ரிக்கக் கீழ் நிலவகைகளும் எ. இண்டிகாவைப் போலுள்ளன. ஆஃப்ரிக்க மேல்நிலை வகைகள் {upland varieties) எ. கோரகானாவை ஒத்துள்ளன. அதனால் இவ்விரு சிற்றினங்களும் தனித்தனியாகத் தோன்றியிருக்க வேண்டும் என்று கருதலாம். தற்கால ஆய்வுகளின் வாயிலாக உகாண்டாவே, கேப்பையின் தாயகமாக ருக்க வேண்டும் என்று தெரிகிறது. 3000 ஆண்டுகளுக்கு முன் இது இந்தியாவிற்கு வந்திருக்கலாம் என்பதே பொதுவான கருத்தாகும். வளரியல்பு. கேழ்வரகு 1-2 மீ. வரை வளரக் கூடிய ஒருபருவச் சிறு செடியாகும். தண்டுப்பகுதி அதிக தூர் கொண்டிருப்ப தால் கொத்தாகக் காணப் மஞ்சரி-கதிர்களுடன் சிறு கதிர்