உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/717

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்பகம்‌ 697

சண்பகம் 697 65-70% பல் எஸ்டர் இழைகள் இணைவிக்கப்பட்டுச் சிறந்த பண்புகளுடன் நெய்யப்படுகிறது. -மே.ரா.பாலசுப்பிரமணியன் இரா. சரசவாணி நூலோதி. 7. Gresicki, Watson's Textile Design and Colour, Seventh Edition., Butterworth & Co.. Publishers, London. 1975. சண்பகம் சண்பகத்தின் தாவரவியல் பெயர் மைகீலியா சம்பகா Michelia champaka) என்பதாகும். இது மெக்னோலி யேசி எனப்படும். இருவித்திலைக் குடும்பத்தைச் சேர்ந்தது. அழகிய தோற்றத்தைக் கொண்ட சிறு மரமான இது உலகின் வெப்பச் சார்பு மண்டலங்களில் வளரும். தண்டின் உள்ளமைப்பில் டிரைகைடுகள் (trachied) காணப்படுவதால் இக் குடும்பத்தைத் தொன்மையானதாகக் கருதுவர். தண்டிலும், இலையிலும், பாரங்கைமாத் திசுவிலும் எண்ணெய்க் குழிகள் உள்ளன. வளரியல்பு. பசுமை மாறா மரத்தின் வேர்த் தொகுப்புச் சாதாரணமானது. இலைகள் தனி இலை, மாற்றிலையடுக்கம், சுழலமைப்பில் உள்ளன. இலையடிச் செதில்கள் படகு போன் இலை மொட்டை மூடிக் கொண்டுள்ளன. தளிர் வெளிவந்த வுடன் இலையடிச் செதில்கள் உதிர்ந்து தண்டின் மீது வளையம் போன்ற வடுக்களைத் தோற்று விக்கின்றன. சிறகு வடிவ வலைப்பின்னல் நரம் பமைப்புடையது. இலைகள் தோல் போன்று வெளிர் பசுமை வண்ணம் பெற்றுள்ளன. சண்பகத்தை . அதன் மிக அழகான ஆழ்ந்த மணமிக்க மலருக்காகத் தோட்டங்களில் வளர்ப்பர். வண்டமர் மலர் என்றும் இது குறிப்பிடப்படுகின்றது. ஏப்ரல்-ஜூலையில் பூக்கள் தோன்றுகின்றன. மலர் வழிபாட்டிற்கு ஏற்றதாகக் கருதப்படுகின்றது.உயர மான அழகான என்றும் பசுமையாகவே இருக்கக் கூடிய மரக் கிளைகள் விரிந்து பரந்து அடர்த்தியாகக் குடையைப் போன்று காணப்படும். சண்பகம் இனிய மணமிக்க மலர்களைக் கொண்டு இலையுதிராத அடர்ந்த கிளைகளை உடைய உயர் தாவரக் குடும்பத்தில் முதன்முதவாகத் தோன்றிய மரமாகக் கருதப்படுகின்றது. இதன் இலைகள் பெரி யவை; மலர்கள் வெண்மையாகவும் மஞ்சள் நிறமாக வும் இருக்கும். பிரிந்த அல்லிகளும் மகரந்தக் கேசரங் களும் மிகுதியாகக் காணப்படுகின்றன. சூலகத்தில் பல சூல்கள் தனித்தனியே காணப்படும். இமயமலை மேற் குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இது நன்றாக வளர்கிறது. இனிய நறுமணமிக்க மலருக்காக இதை வீடுகளில் வளர்க்கின்றனர். மொட்டாக அல்லி பிரிந்த (polypetalae) பூக்கள் தனித்தவை. இலைக் கோணங்களில் தோன்றுகின்றன. பூக்கள் இருக்கும்போது மஞ்சள் நிற அகலமான, விரைவில் உதிர்ந்துவிடும் பூவடிச் செதில் களால் (bracts) மூடப்பட்டுள்ளன. புல்லிகளும் அல்விகளும் 15 அல்லது அதற்கு மேல் இருக்கும். பூக்கள் ஆழ்ந்த மஞ்சள் நிறமாகவோ வெண்மை நிறமாகவோ இருக்கும். மகரந்தத் தாள்கள் (Stamens) மிகுந்துள்ளன. மகரந்தக் கம்பி (filament) குட்டை யானது; சூலசுத்தின் பல சூல் இலைகள் தனித்தனியே பிரிந்துள்ளன. இவ்வகைச் சூலகம், இணையா இலைச் சூலகம் (apocarpous) எனப்படுகின்றது. கனி, திரள் கனி (aggregate fruit) வகையைச் சேர்ந்தது. இருபால் மலர்கள் மேல்மட்டச் சூலகங் (hypogy- nous) கொண்டவை; ஆரச் சமச்சீர் அமைப்புடை யவை. இதழ்கள் மணமுள்ளவை; பொன் மஞ்சள் வண்ணம் பெற்றவை. 12-15 இதழ்கள் வட்டத் திற்கு மூன்றாக அமைந்து தனித்தும், சுழல் அடுக்கம் கொண்டும் உள்ளன. பூத்தளம் சதைப் பற்றுடன் கூம்புபோல் நீண்டுள்ளது. இதன் கீழ்ப் பகுதியில் கணக்கற்ற காம்பற்ற மகரந்தத்தாள் கள், தனித்துச் சுழலும் அமைப்பில் உள்ளன. இரண்டு மகரந்தப்பைகள் உள்ளன. மலரின் நடுவில் பூத்தளம் (gynophore) உள்ளது. தனித்த சூலகங்கள் பூத்தளத்தின் மீது பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு குட்டையான கணக்க கற்ற சூலகத்திலும் சிறு சூலகத்திற்கும் தனிப்பட்ட காம்பு வளைந்து காணப்படுகின்றது. தொங்கு சூல்கள் ஒவ்வொரு சிறு விளிம்புடன் இணைந்துள்ளன (marginal placen- tation). பூச்சிகளால் மகரந்தச் சேர்க்கை நடைபெறு கின்றது. நறுமணமுள்ள பெரிய மலர்கள் கவர்ச்சி யானவை. ஒவ்வொரு மலரும் ஒருபுறம் வெடித்த பல திரள் கனியைத் தோற்றுவிக்கின்றது. மரபு வழிப் பண்புகள். தண்டின் திசுக்களில் சைலம் டிரைகைடுகளுடனும், மலரின் பூத்தளம் நீண்டு சதைப்பற்றுடனும் காணப்படும். மலரின் முக்கிய உறுப்புகள் சுழல் அமைப்பில் உள்ளமை விதை மூடாத் தாவரப் (gymnosperm) பண்புகளைக் குறிக்கும். இதனால் இத்தாவரக் குடும்பம் பூக்கும் தாவர (angiosperms) வகையில் பழமையானது என்று கருதப்படுகின்றது. பொருளாதாரச் சிறப்புகள். இது இமயமலைப் பகுதி, அஸ்ஸாம், பர்மா, மேற்குத் தொடர்ச்சி மலை ஆகிய இடங்களில் வளர்கின்றது. இதன் கட்டை இலேசாகவும் கடினமாகவும் உள்ளதால் வீடு கட்டும் வேலைக்குப் பயன்படுகிறது. சண்பக மரக்கட்டையின் சாறு கசப்பாக இருக்கும். இச்சாறு நஞ்சை முறிக்க வல்லது. வயிற்றில் உள்ள புழுக்களை நீக்கும் தன்மை